செய்திகள் :

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்! நிஃப்டி 25,000 புள்ளிகளைக் கடந்தது!

post image

இந்திய பங்குச் சந்தையான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றது.

ஈரான் - இஸ்ரேல் மோதல் காரணமாக புவிசாா் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் முதலீட்டாளா்களை பதற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

இதனால், மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடந்த மூன்று நாள்களாக சரிவுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில், வாரத்தின் கடைசி நாளான இன்று, வர்த்தகம் தொடங்கியது முதல் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றது.

காலை 11 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 691.69 புள்ளிகள் அதிகரித்து 82,053.56 ஆகவும், நிஃப்டி 210.90 புள்ளிகள் அதிகரித்து 25,004.15 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.

சென்செக்ஸை பொருத்தவரை அதிகபட்சமாக எம்&எம் பங்குகள் 2.50 சதவிகிதத்துக்கு மேல் ஏற்றம் கண்டுள்ளது. ஹீரோ மோட்டர்கார்ப் 2.21 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது.

அதேபோல், நிஃப்டியில் அதிகபட்சமாக பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் 2 சதவிகிதம் வரை ஏற்றம் கண்டுள்ளது.

இதையும் படிக்க : தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

அனைத்து பைக்களுக்கும் ஏபிஎஸ் கட்டாயம்! 2 ஹெல்மெட்

சாலை விபத்துகளைக் குறைத்து, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு, அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் ஏபிஎஸ் எனப்படும் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பைக் கட்டாயமாக்கும் பரிந்துரைக்க... மேலும் பார்க்க

ரூ. 26,000-க்கு ஆப்பிள் ஐபோன் 15 வாங்க முடியும்! எப்படி?

ஆப்பிள் ஐபோன் 15 மொபைல் போனுக்கு அமேசான் தளத்தில் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்பது மொபைல் பிரியர்கள் பலரின் கனவாக இருக்கிறது. தற்போது ஆப்பிள் ஐபோன் 16 அறிமுகமான நி... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 440 வெள்ளிக்கிழமை குறைந்துள்ளது.கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகி வரும் நிலையில், வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 120 அதிகரி... மேலும் பார்க்க

விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை 35% சரிவு

கடந்த ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் இந்தியாவின் 15 முக்கிய இரண்டாம் நிலை நகரங்களில் புதிதாக விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை 35 சதவீதம் சரிவடைந்துள்ளது.இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான ‘ப்ராப்ஈக்... மேலும் பார்க்க

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 அறிமுகம்..! சிறப்பம்சங்கள் என்ன?

டொயோட்டா நிறுவனத்தின் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 கார் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள டொயோட்டா கார்கள் இந்தியாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கிறது... மேலும் பார்க்க

எச்டிஎஃப்சி-யின் கடன் வட்டி குறைப்பு

தனியாா் துறையைச் சோ்ந்த எச்டிஎஃப்சி வங்கி, தனது நிதி செலவு அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதங்களை (எம்சிஎல்ஆா்) 10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.இது குறித்து வங்கியின் வலைதளத்தில் தெரிவிக்கப்... மேலும் பார்க்க