செய்திகள் :

லஞ்சம் அளிப்போருக்கு மட்டுமே வீடு! கர்நாடக எம்.எல்.ஏ.வின் தொலைபேசி உரையாடல் கசிவு!

post image

கர்நாடகத்தில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வீட்டுவசதித் திட்டத்தின்கீழான வீடுகள் வழங்கப்படுவதாக காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.

கர்நாடகத்தில் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் வீடுகளை யாருக்கு வழங்க வேண்டும் என்று துறை பிரதிநிதிகளின் பரிந்துரைகளுக்கு வழங்காமல், லஞ்சம் அளிப்பவர்களுக்காக 950 வீடுகளை வழங்கியதாக அம்மாநில கொள்கை மற்றும் திட்டக்குழுவின் துணைத் தலைவரும் எம்எல்ஏவுமான பாட்டீல் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இது தொடர்பாக எம்எல்ஏ பாட்டீல் பேசிய தொலைபேசி உரையாடல் கசிந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, வீட்டுவசதித் துறை அமைச்சர் ஜமீர் அகமது கானின் உதவியாளர் சர்பராஸ் கானுடன் பாட்டீல் தொலைபேசியில் பேசுகையில், யார் பணம் கொடுத்தாலும், வீடுகளைக் கொடுப்பதற்கு இது என்ன வணிகமா?

பிரதிநிதிகளின் பரிந்துரைகளைவிட பணம் அளிப்பவர்களின் பரிந்துரைகளுக்கு வீட்டுவசதிக் கழகம் முன்னுரிமை அளிப்பது ஏன்? இவ்வாறு செய்தால் எனக்கு என்ன மரியாதை? என்று கேட்டுள்ளார்.

ஆனால், பாட்டீலின் குற்றச்சாட்டை மறுத்த சர்ஃபராஸ், லஞ்சம் கொடுத்து வீடுகள் பெற்ற பயனாளிகளின் பட்டியலைக் கொடுத்தால், லஞ்சம் பெற்ற அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று கூறினார்.

இருப்பினும், அவர்களின் பட்டியலை வெளியிட்டால், கர்நாடக அரசு கதிகலங்கி விடும் என்று எச்சரித்துள்ளார்.

இதையும் படிக்க:இது வெறும் 5% தாக்குதல் மட்டுமே! இஸ்ரேலுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை!

தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தப்படும் கங்கை நதி! காங்கிரஸ் குற்றச்சாட்டு

தேர்தல் பிரசாரத்துக்காக கங்கை நதி தூய்மையை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.பிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரமதர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட... மேலும் பார்க்க

உத்தரபிரப் தேசத்தில் மின்னல் பாய்ந்து 4 பேர் பலி

உத்தரபிரப் தேசத்தில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மின்னல் பாய்ந்து 4 பேர் வெள்ளிக்கிழமை பலியானார்கள். முதல் சம்பவத்தில், சராய் அகில் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த நான்கு பேர் மீது மின்னல் பா... மேலும் பார்க்க

பறவை மோதியதால் தில்லி ஏர் இந்தியா விமானம் ரத்து

பறவை மோதியதால் தில்லி செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது. தலைநகர் தில்லியில் இருந்து புணே சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வெள்ளிக்கிழமை பறவை மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த விம... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம், கான்கர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை மாவட்ட ரிசர்வ் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப... மேலும் பார்க்க

பாதுகாப்பு மீறல்களில் ஏர் இந்தியா! விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை!

ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில், 240-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், போயிங் ரக விமானங்களை ஆய்வுக்... மேலும் பார்க்க

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி; ஆனால், பிகாரில் இல்லை! - ஆர்ஜேடி - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி மீது பிரதமர் மோடி விமர்சனம் தெரிவித்துள்ளார்.கடந்த 5 மாதங்களில் 5-வது முறையாக பிகாருக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி சிவா... மேலும் பார்க்க