செய்திகள் :

``ஜூலை பாதி வரை நிறுத்தி வைக்கிறோம்..'' - விமான விபத்தையடுத்து ஏர் இந்தியா அதிரடி முடிவு!

post image

குஜராத் அகமதாபாத்தில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 171 விமானம் கடந்த 12-ம் தேதி லண்டனுக்கு கிளம்பியது.

கிளம்பிய கிட்டத்தட்ட 5 நிமிடங்களிலேயே, அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் விடுதியில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விமானத்தில் இருந்து 242 பேரில் இங்கிலாந்து குடிமகன் ஒருவர் மட்டும் உயிர்ப் பிழைத்திருக்கிறார். விபத்திற்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.

அகமதாபாத் விமான விபத்து
அகமதாபாத் விமான விபத்து

'விமானத்தில் இருந்த ஏதாவது ஒரு கோளாறினால், இந்த விபத்து ஏற்பட்டதா?' என்ற கோணத்திலும் விபத்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் காம்ப்பெல் வில்சன் கூறியிருப்பதாவது, "விபத்தான விமானம் நன்கு பராமரிக்கப்பட்டு வந்தது. 2023-ம் ஆண்டு தான் இந்த விமானத்தின் பெரிய சோதனை நடத்தப்பட்டது. அடுத்ததாக, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடக்க இருந்தது.

அந்த விமானத்தின் வலது இன்ஜீன் 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் மாற்றப்பட்டது. இடது இன்ஜீன் கடந்த ஏப்ரல் மாதம் ஆய்வு செய்யப்பட்டது.

விமான விபத்து
விமான விபத்து

விமானம் மற்றும் இன்ஜீன்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன. விமான புறப்படுவதற்கு முன்பு, அதில் எந்தப் பிரச்னையும் இருந்திருக்கவில்லை.

விமானத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க, போயிங் 787 மற்றும் போயிங் 777 விமானங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ளப் போகிறோம். இதற்கு அதிக நேரம் தேவைப்படும், விமான புறப்பாடுகளில் மாற்றம் ஏற்படும் என்பதால் எங்களது 15 சதவிகித சர்வதேச விமானங்களின் செயல்பாட்டை ஜூன் 20 (இன்று) முதல் ஜூலை பாதி வரை நிறுத்தி வைக்கிறோம்.

இதன் மூலம் எதிர்பாராத பிரச்னைகள் ஏற்படும்போது, அதை சரியாக கையாள முடியும். ஜூன் 20 (இன்று) முதல் ஜூலை பாதி வரை, சர்வதேச ஏர் இந்திய விமானத்தின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது". என்று தெரிவித்தார்.

Plane Crash: அகமதாபாத் விமான விபத்து; கருப்பு பெட்டிகள் ஆய்வுக்காக அமெரிக்கா செல்கிறதா?

சேதம் அடைந்த கருப்பு பெட்டிகள்கடந்த ஜூன் 12-ம் தேதி, மதியம் 1:38-க்கு அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கிளம்பிய விமானம் சுமார் 1:43 மணியளவில் விபத்தில் சிக்கியது. அந்த போயிங் 171 விமானத்தில் பயணித்த 2... மேலும் பார்க்க

திருச்சி: அரசு பேருந்தும், அரசு வாகனமும் மோதி விபத்து; பரிதாபமாக உயிரிழந்த முசிறி ஆர்டிஓ

மதுரையைப் பூர்வீகமாக கொண்ட ஆரமுத தேவசேனா (வயது: 52), திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி வருவாய்க் கோட்டாட்சியராகப் பணியாற்றி வந்தார்.இவர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை... மேலும் பார்க்க

Air India: ``மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்; கருப்புப் பெட்டி..'' - TATA தலைவர் தரும் விளக்கம் என்ன?

குஜராத்தில் ஜூன் 12-ம் தேதியன்று, டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 எண் கொண்ட போயிங் 787-8 ரக விமானம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 1:38 மணிக்கு 242 பேருடன் லண்... மேலும் பார்க்க

Yercaud Express: ரயிலைக் கவிழ்க்கச் சதி? தனிப்படைகள் அமைத்து ரயில்வே காவல்துறை விசாரணை;பின்னணி என்ன?

ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இரவு 9 மணிக்குத் தினசரி ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது.இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் ஈரோடு ரயில் நிலைய... மேலும் பார்க்க

Plane Crash: சம்பவ இடத்தில் 800 கிராம் தங்கம், 80,000 ரூபாய் பணம், பகவத் கீதை, பாஸ்போர்ட் மீட்பு

கடந்த ஜூன் 12-ம் தேதி அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்துச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 240 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து நிகழ்ந்த 5 நிமிடங்களுக்குள் விபத்தில் சிக்கியவர... மேலும் பார்க்க

Plane crash: பலியான ஏர் இந்தியா ஊழியர்களுக்கு இறுதிச்சடங்கு; மும்பையில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான விமான கேப்டன் சுமீத் சபர்வால் உடல் இன்று அதிகாலை மும்பைக்கு சிறப்பு விமானத்தில் கொண்டு வரப்பட்டது. அவரது உடல் இன்று மும்பை பவாயில் உள்ள அவரது இல்... மேலும் பார்க்க