செய்திகள் :

திருச்சி: அரசு பேருந்தும், அரசு வாகனமும் மோதி விபத்து; பரிதாபமாக உயிரிழந்த முசிறி ஆர்டிஓ

post image

மதுரையைப் பூர்வீகமாக கொண்ட ஆரமுத தேவசேனா (வயது: 52), திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி வருவாய்க் கோட்டாட்சியராகப் பணியாற்றி வந்தார்.

இவர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று தனது வாகனத்தில் வருகை தந்தார்.

Death
Death

ஜீயபுரம் என்ற பகுதியில் வந்தபோது, திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்து சாலையின் நடுப்பகுதியைத் தாண்டி வந்ததால் எதிரே வந்த ஆர்.டி.ஓ வாகனத்தின் பக்கவாட்டில் மோதி விட்டது.

இதனால், நிலைதடுமாறிய வாகனம் சாலையோரம் நின்ற ஜே.சி.பி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், ஆர்.டி.ஓ., ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த வாகன ஓட்டுநர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ஜீயபுரம் காவல் நிலைய போலீஸார், விபத்தில் உயிரிழந்த வருவாய்க் கோட்டாட்சியர் உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு பேருந்து சாலை
அரசு பேருந்து சாலை

அதனைத் தொடர்ந்து, இந்த விபத்து குறித்துத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பேருந்து மோதியதில் முசிறி ஆர்.டி.ஓ உயிரிழந்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Air India: ``மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்; கருப்புப் பெட்டி..'' - TATA தலைவர் தரும் விளக்கம் என்ன?

குஜராத்தில் ஜூன் 12-ம் தேதியன்று, டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 எண் கொண்ட போயிங் 787-8 ரக விமானம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 1:38 மணிக்கு 242 பேருடன் லண்... மேலும் பார்க்க

Yercaud Express: ரயிலைக் கவிழ்க்கச் சதி? தனிப்படைகள் அமைத்து ரயில்வே காவல்துறை விசாரணை;பின்னணி என்ன?

ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இரவு 9 மணிக்குத் தினசரி ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது.இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் ஈரோடு ரயில் நிலைய... மேலும் பார்க்க

Plane Crash: சம்பவ இடத்தில் 800 கிராம் தங்கம், 80,000 ரூபாய் பணம், பகவத் கீதை, பாஸ்போர்ட் மீட்பு

கடந்த ஜூன் 12-ம் தேதி அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்துச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 240 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து நிகழ்ந்த 5 நிமிடங்களுக்குள் விபத்தில் சிக்கியவர... மேலும் பார்க்க

Plane crash: பலியான ஏர் இந்தியா ஊழியர்களுக்கு இறுதிச்சடங்கு; மும்பையில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான விமான கேப்டன் சுமீத் சபர்வால் உடல் இன்று அதிகாலை மும்பைக்கு சிறப்பு விமானத்தில் கொண்டு வரப்பட்டது. அவரது உடல் இன்று மும்பை பவாயில் உள்ள அவரது இல்... மேலும் பார்க்க

திருப்பூர்: இருசக்கர வாகனத்தின் மீது கவிழ்ந்த கன்டெய்னர் லாரி; தாய், மகளுக்கு நேர்ந்த சோகம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகர்ப் பகுதியில் நால்ரோடு சந்திப்பில் கன்டெய்னர் லாரி ஒன்று கோவையிலிருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தது.பல்லடம் நகராட்சி அலுவலகம் அருகே எதிர்பாராத விதமாகக் கட்டுப்பா... மேலும் பார்க்க

MV Won Hai 503: 8 நாள்களாக எரியும் தீ; ஆழ்கடலில் விடப்பட்ட கப்பல்; கேரள கடலோர மக்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு துறைமுகத்திலிருந்து மும்பை துறைமுகம் நோக்கிச் சென்ற சிங்கப்பூரைச் சேர்ந்த எம்.வி வான் ஹாய் 503 என்ற சரக்கு கப்பல் கடந்த 9-ம் தேதி தீப்பிடித்து எரிந்தது.கேரள மாநிலம் கண்ணூர் அழிக்கால் மீன்பிடி... மேலும் பார்க்க