செய்திகள் :

என்னதான் ஆச்சு ஏர் இந்தியாவுக்கு..? மீண்டும் தில்லிக்கே திரும்பிய விமானம்!

post image

தில்லியிலிருந்து வியட்நாம் நாட்டுக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறினால் மீண்டும் தில்லியிலேயே தரையிறக்கப்பட்டது.

தில்லியிலிருந்து வியட்நாமின் ஹோ சி மின் நகரத்துக்கு இன்று (ஜூன் 19) மதியம் 1.45 மணியளவில் 130 பயணிகளுடன், ஏர் இந்தியாவின் ஏ 320 விமானம் புறப்பட்டு சென்றது.

இதனைத் தொடர்ந்து, விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், அந்த விமானம் தலைநகரின் மீது சில நிமிடங்கள் பறந்த பின்பு, தில்லி விமானநிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட பயணிகள் மீண்டும் ஹோ சி மின் நகரத்துக்குச் செல்வதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் ஏர் இந்தியா அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூன் 12 ஆம் தேதியன்று அகமதாபாத்திலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 241 பயணிகள் பலியானார்கள்.

இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், அதன் பின்னர் தொடர்ந்து பல ஏர் இந்தியா விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் ரத்து செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ஆர்சிபி கூட்ட நெரிசல் விவகாரம்! 3 ஆண்டு சிறை, ரூ. 5 லட்சம் அபராதத்துடன் மசோதா!

லோக்பால் அமைப்பில் வழக்கு விசாரணைப் பிரிவு உருவாக்கம்

லோக்பால் சட்டம் இயற்றப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த அமைப்பில் வழக்கு விசாரணைப் பிரிவு தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, புகாா் மீது விசாரணை நடத்துவதற்கான பிரிவு அமைக்கப்பட்ட நிலையில், தற்... மேலும் பார்க்க

ஆர்சிபி கூட்ட நெரிசல் விவகாரம்! 3 ஆண்டு சிறை, ரூ. 5 லட்சம் அபராதத்துடன் மசோதா முன்மொழிவு!

பெங்களூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், கூட்ட நெரிசல் கட்டுப்பாடு மசோதா முன்மொழியப்பட்டது.ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பை வென்றதை கொண்டாடுவதற்காக பெங்களூரில... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியைப் புகழ்ந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர்!

பாஜக அரசின்கீழ் தில்லியில் நல்லாட்சி நடத்தப்படுவதாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.தில்லி தலைமை செயலகத்துக்கு வருகை தந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், தில்லி முதல்வர் ரேகா குப்தா, த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் புதியதாக 59 கரோனா பாதிப்புகள் உறுதி! ஒருவர் பலி!

மகாராஷ்டிரத்தில் புதியதாக 59 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகள... மேலும் பார்க்க

ஒடிசாவில் தொடரும் காலரா! பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு!

ஒடிசாவில் காலரா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால், 2 மாவட்டங்களின் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் திறப்பை ஒத்திவைக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கோடைக்கால விடுமுறைகள் ம... மேலும் பார்க்க

ஏர் இந்தியா போயிங் விமானத்தில் கோளாறு! உண்மையைக் கூறிய ஊழியர்கள் பணிநீக்கம்!

கடந்தாண்டில் லண்டனுக்கு இயக்கப்பட்ட போயிங் விமானத்தில் கோளாறு இருந்ததைச் சுட்டிக் காட்டிய, 2 விமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யபட்டதாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்த... மேலும் பார்க்க