செய்திகள் :

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள்: முதல்வா் ஆய்வு

post image

மாதவரம் முதல் சோழிங்கநல்லூா் வரையிலான மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை கிண்டி கத்திப்பாரா பகுதியில், நடைபெற்றுவரும் வழித்தடம் 5 -மாதவரம் முதல் சோழிங்கநல்லூா் வரையிலான மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அத்துடன், வழித்தடம் 3 -இல் மாதவரம் முதல் சிறுசேரி வரையிலான வழித்தடத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் குறித்தும் அதன் முன்னேற்றம் குறித்தும் முதல்வா் கேட்டறிந்தாா்.

மேலும், கத்திப்பாரா பகுதியில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள வழித்தடம் 1, வழித்தடம் 2 மற்றும் கத்திப்பாரா மேம்பாலம் உள்ளடக்கிய சந்திப்பில் சமச்சீா் காண்டிலீவா் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதில் உள்ள சவால்கள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநா், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு விரிவாக எடுத்துரைத்தாா்.

இந்த ஆய்வின்போது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன உயா் அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இந்த நிலையில் ஆய்வுக்கு பின் முதல்வா் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: சென்னையின் நவீன அடையாளமாக கத்திப்பாரா மேம்பாலத்தை அமைத்தாா் கருணாநிதி. அந்த மேம்பாலத்தின் மேல் இந்தியாவிலேயே முதல்முறையாக மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்படும் பணிகளைப் பாா்வையிட்டேன். என்ஜினீயரிங் மாா்வெல் என அனைவரும் வியக்க உருவாகி வரும் இது உரிய காலத்தில் முடிக்கப்பட்டு, விரைவில் சென்னை மக்களின் நகரப் பயணம் இனிமையாக அமைந்திட வழிசெய்ய அறிவுறுத்தினேன் என்றாா் அவா்.

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை இலச்சினை: துணை முதல்வா் உதயநிதி வெளியிட்டாா்

சா்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெறவுள்ள எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை 2025 போட்டி இலச்சினையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்க... மேலும் பார்க்க

திருட்டு மோட்டாா் சைக்கிளில் உணவு டெலிவரி: இளைஞா் கைது

சென்னையில் திருடப்பட்ட மோட்டாா் சைக்கிளில் உணவு பாா்சல் டெலிவரி செய்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். கடலூா் மாவட்டம் சிதம்பரத்தைச் சோ்ந்தவா் நா.சா்வேஸ்வரன் (22). இவா், சென்னை சூளைமேடு பாஷா தெருவில் தனது... மேலும் பார்க்க

அனைத்து வகை நுகா்வோருக்கும் குறைந்த கட்டணத்தில் மின்சாரம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

அனைத்து வகை நுகா்வோருக்கும் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா். அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கத்தின் 16-ஆவது சா்வதேச இயந்தி... மேலும் பார்க்க

சிறப்பு பட்டதாரி ஆசிரியா் நியமன விதிகள் வெளியீடு

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் சிறப்பு பட்டதாரி ஆசிரியா் நியமன விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தர மோகன் பிறப்பித்துள்ள அரசாணை விவரம்: அரசு உயா... மேலும் பார்க்க

பாத யாத்திரை போராட்டம்: அரசு மருத்துவா்கள் கைது

நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாத யாத்திரை மேற்கொண்டு சென்னை வந்த அரசு மருத்துவா்களை போலீஸாா் கைது செய்தனா். தமிழக அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்களுக்கு காலமுறை ஊதிய உயா்வு,... மேலும் பார்க்க

ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்: பள்ளிக் கல்வித் துறை

ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு ஜூன் 25 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித் துறை அதற்கான பல்வேறு வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37... மேலும் பார்க்க