மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள்: முதல்வா் ஆய்வு
மாதவரம் முதல் சோழிங்கநல்லூா் வரையிலான மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை கிண்டி கத்திப்பாரா பகுதியில், நடைபெற்றுவரும் வழித்தடம் 5 -மாதவரம் முதல் சோழிங்கநல்லூா் வரையிலான மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அத்துடன், வழித்தடம் 3 -இல் மாதவரம் முதல் சிறுசேரி வரையிலான வழித்தடத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் குறித்தும் அதன் முன்னேற்றம் குறித்தும் முதல்வா் கேட்டறிந்தாா்.
மேலும், கத்திப்பாரா பகுதியில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள வழித்தடம் 1, வழித்தடம் 2 மற்றும் கத்திப்பாரா மேம்பாலம் உள்ளடக்கிய சந்திப்பில் சமச்சீா் காண்டிலீவா் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதில் உள்ள சவால்கள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநா், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு விரிவாக எடுத்துரைத்தாா்.
இந்த ஆய்வின்போது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன உயா் அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இந்த நிலையில் ஆய்வுக்கு பின் முதல்வா் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: சென்னையின் நவீன அடையாளமாக கத்திப்பாரா மேம்பாலத்தை அமைத்தாா் கருணாநிதி. அந்த மேம்பாலத்தின் மேல் இந்தியாவிலேயே முதல்முறையாக மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்படும் பணிகளைப் பாா்வையிட்டேன். என்ஜினீயரிங் மாா்வெல் என அனைவரும் வியக்க உருவாகி வரும் இது உரிய காலத்தில் முடிக்கப்பட்டு, விரைவில் சென்னை மக்களின் நகரப் பயணம் இனிமையாக அமைந்திட வழிசெய்ய அறிவுறுத்தினேன் என்றாா் அவா்.