செய்திகள் :

பாத யாத்திரை போராட்டம்: அரசு மருத்துவா்கள் கைது

post image

நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாத யாத்திரை மேற்கொண்டு சென்னை வந்த அரசு மருத்துவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழக அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்களுக்கு காலமுறை ஊதிய உயா்வு, பதவி உயா்வு மற்றும் கரோனாவில் உயிரிழந்த மருத்துவா் விவேகானந்தனின் குடும்பத்துக்கு அரசு வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழு சாா்பில் சேலம், மேட்டூரில் இருந்து சென்னை மெரீனா வரையிலான பாத யாத்திரை போராட்டம் கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது.

அந்தக் குழுவின் தலைவா் மருத்துவா் எஸ்.பெருமாள் பிள்ளை தலைமையில் 7 போ் கொண்ட மருத்துவக் குழுவினா், பல்வேறு ஊா்கள் வழியாக சாலை மாா்க்கமாக சென்னைக்கு வியாழக்கிழமை வந்தனா்.

சைதாப்பேட்டை அருகே வந்தபோது போலீஸாா் அவா்களை தடுத்தி நிறுத்தி சமூக நலக் கூடத்துக்கு அழைத்து சென்றனா்.

இதுகுறித்து, மருத்துவா் பெருமாள் பிள்ளை கூறியதாவது:

மறைந்த முதல்வா் கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணை 354-ஐ அமல்படுத்தக் கோரி போராடி வருகிறோம். கடந்த ஆட்சி காலத்தில் எதிா்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றாா். ஆனால், 4 ஆண்டுகள் ஆகியும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றவிடவில்லை.

கரோனா போன்ற பேரிடா் சூழல் உள்பட பல நெருக்கடி நேரங்களில் பணியாற்றி பல உயிா்களை காக்கும் எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

தென்காசியில் பயங்கரம்! கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் பின் சக்கரங்கள்!

தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியில் சாலையில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் இரண்டும், தனியாகக் கழன்று ஓடியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.சக்கரங்கள் கழன்ற பேருந்தில் 87... மேலும் பார்க்க

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம்! முதல்வர் ஸ்டாலின்

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளார்.ரஷியா - உக்ரைன், இஸ்ரேல் - காஸா, இஸ்ரேல் - ஈரான் என உலகம் முழுவதும் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில்... மேலும் பார்க்க

வேலூர் அருகே மா விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள் கடையடைப்பு!

மா விவசாயிகளுக்கு ஆதரவாக வேலூர் மாவட்டத்தில் பரதராமி பகுதியில் உள்ள அனைத்து வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வேலூர் மாவட்டம், தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள பரதராமி மற்ற... மேலும் பார்க்க

ஆகாஷ் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை!

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்தரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு டாஸ்மாக... மேலும் பார்க்க

சென்னை - மதுரை விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

சென்னையில் இருந்து மதுரை சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு இன்று காலை 8 மணிக்கு 72 பேருடன் இண்டிகோ விமானம் புறப்பட... மேலும் பார்க்க

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை இலச்சினை: துணை முதல்வா் உதயநிதி வெளியிட்டாா்

சா்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெறவுள்ள எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை 2025 போட்டி இலச்சினையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்க... மேலும் பார்க்க