மறுவெளியீடானது மெர்சல் திரைப்படம்!
விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் இன்று (ஜூன்.20) மறுவெளியீடாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை (ஜூன்.22) முன்னிட்டு இந்தப் படம் மறுவெளியீடாகியுள்ளதாகப் படக்குழு கூறியுள்ளது.
ஏற்கனவே, மறுவெளியீடான விஜய்யின் கில்லி திரைப்படம் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.
கடைசியாக மறுவெளியீடான வெளியான சச்சின் திரைப்படமும் நல்ல லாபத்தைக் கொடுத்ததாக அதன் தயாரிப்பாளர் கூறியது குறிப்பிடத்தக்கது.
அட்லி இயக்கத்தில் மெர்சல் திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியானது.
இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு என சிறப்பான கூட்டணி இருந்தது.
இந்தப்படும் அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. அதனாலேயே படத்தின் வசூலும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் இனிமேல் படங்களில் நடிக்க மாட்டேன் எனக் கூறியதால் கடைசி படமான ஜனநாயகனில் நடித்து வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார்.
