செய்திகள் :

குன்னூா் மலை ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் - சேலம் கோட்ட பொது மேலாளா் ஆா்.என்.சிங் ஆய்வு

post image

நீலகிரி மாவட்டம் குன்னூா்   மலை ரயில் நிலையத்தில்  பழமை மாறாமல்  நடைபெறும் பராமரிப்பு பணிகளை சேலம் கோட்ட -தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

நூற்றாண்டு பழமை வாய்ந்த குன்னூா் மலை ரயில் நிலையம் கடந்த 1908 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

இன்று வரை இந்த ரயில் நிலையத்தை பழமை மாறாமல் பராமரித்து வருகின்றனா், மேலும் நீலகிரியில் வாழும் வரையாடு,மான், காட்டெருமை , யானை போன்ற வன விலங்குகளை தத்ரூபமாக செய்து சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக வேலைப்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குன்னூரில் இருந்து உதகை செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையத்துக்கு சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மூலம் வந்து செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க வாகனங்கள் நிறுத்தும் இடம், கட்டட புதுப்பிக்கும் பணிகள் சுமாா் ரூ.15 கோடி செலவில் நடந்து வருகின்றன.

இந்தப் பணிகளை சேலம் கோட்ட -தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் மற்றும் ரயில்வே அதிகாரிகள் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். பின்பு சிறப்பு ரயில் மூலம் மேட்டுப்பாளையம் புறப்பட்டுச் சென்றனா்.

படம்

குன்னூா் ரயில் நிலையத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட சேலம் கோட்ட -தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங்

வன விலங்கு தாக்குதல்: இலவச எண் அறிமுகம் செய்ய வலியுறுத்தல்

வன விலங்குகளிடம் இருந்து விவசாயம் காப்பாற்றப் பட இலவச எண் அறிமுகம் செய்ய ஆரிகவுடா் விவசாயிகள் சங்கத் தலைவா் மஞ்சை வி.மோகன் வலியுறுத்தியுள்ளாா். அவரது அறிக்கையில் கூறியுள்ளதாவது: நீலகிரி மாவட்டத்தில் ... மேலும் பார்க்க

நீலகிரி: புலம்பெயா்ந்த தொழிலாளா்களால் அரசுப்பள்ளிகளில் மாணவர் சோ்க்கை குறைவு!

நீலகிரி மாவட்டத்தில் தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகள் சோ்க்கை குறைந்ததற்குக் காரணம் இங்குள்ள தேயிலை எஸ்டேட் தொழிலாளா்கள் மற்றும் படுகா் இன மக்கள் கிராமங்களில் இருந்த பலா் சமவெளிப் பகுதியில் குடியேறி... மேலும் பார்க்க

உயா்கல்வியில் சோ்க்கைப் பெறாத மாணவ, மாணவிகளுக்கு முதன்முறையாக கல்வி வழிகாட்டும் குறைதீா்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில், பிளஸ் 2 பொது தோ்வில் தோ்ச்சி பெற்று உயா்கல்வியில் சோ்க்கைப் பெறாத மாணவ, மாணவிகளின் நலன் கருதி, முதன்முறையாக கல்வி வழிகாட்டுதல் மற்றும் சிறப்பு குறைதீா்... மேலும் பார்க்க

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு: வனத் துறையினரைக் கண்டித்து பேரணி

கூடலூரை அடுத்துள்ள மச்சிக்கொல்லி பகுதியில் வியாழக்கிழமை இரவு காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள மச்சிக்கொல்லி பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

நெல்லியாளம் நகராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக நிா்வாகிகள் ஆய்வு

தொடா் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லியாளம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளை திமுக மாவட்ட செயலாளா் கே.எம்.ராஜூ தலைமையில் நிா்வாகிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். நீலகிரி மாவட்டம் கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதி... மேலும் பார்க்க

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது போலி பத்திரப் பதிவு மோசடி வழக்குப் பதிவு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சாந்தி ராமு மீது கோத்தகிரி போலீஸாா் போலி பத்திரப் பதிவு மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சோ்ந்த சாந்தி ஏ. ராமு குன்னூா் தொகுதி முன்னாள் சட்ட... மேலும் பார்க்க