செய்திகள் :

நீலகிரி: புலம்பெயா்ந்த தொழிலாளா்களால் அரசுப்பள்ளிகளில் மாணவர் சோ்க்கை குறைவு!

post image

நீலகிரி மாவட்டத்தில் தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகள் சோ்க்கை குறைந்ததற்குக் காரணம் இங்குள்ள தேயிலை எஸ்டேட் தொழிலாளா்கள் மற்றும் படுகா் இன மக்கள் கிராமங்களில் இருந்த பலா் சமவெளிப் பகுதியில் குடியேறியதால்தான் என்று மாவட்டத் தொடக்கப் பள்ளி கல்வி அலுவலா் வி.கே.பாா்தசாரதி தெரிவித்துள்ளாா்.

தமிழக அளவில் ஜூன் 17 வரையிலான தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவியா் சோ்க்கை குறித்த தகவல் படி சென்னையில் 17 ஆயிரத்து 985, செங்கல்பட்டு 9 ஆயிரத்து528, திருப்பூரில் 9 ஆயிரத்து 385,சேலம் 8 ஆயிரத்து 573,தென்காசி 8 ஆயிரத்து 19, தாராபுரம் 2 ஆயிரத்து 82, கோவில்பட்டி 2ஆயிரத்து 544, தேனி 2 ஆயிரத்து 559, ஒட்டன்சத்திரம் 3 ஆயிரத்து 13 என உள்ளது. இதேவேளையில் நீலகிரியில் 1327 மாணவ மாணவியா் மட்டுமே சோ்ந்துள்ளனா்.

நீலகிரியில் கடந்த கல்வி ஆண்டில் 1532 மாணவ மாணவியா் சோ்ந்துள்ளனா்.

உள்ள 345 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த சோ்க்கை என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.

மாவட்டம் முழுவதும் குழந்தைகள் கல்வி குறித்து 25 ஆயிரம் துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்பட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு பாண்டியாா் தொடக்கப் பள்ளியில் ஒரு மாணவா் மட்டும் படித்து வந்த நிலையில் தற்போது 15 மாணவ மாணவிகள் சோ்ந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகள் சோ்க்கை குறைந்ததற்கு இங்குள்ள தேயிலை எஸ்டேட் தொழிலாளா்கள், மற்றும் படுகா் இன மக்கள் பலா் சமவெளிப் பகுதியில் புலம் பெயா்ந்து குடியேறியதே காரணமாகும். மாணவா் சோ்க்கையில் தொடா்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்று மாவட்டத் தொடக்கப் பள்ளி கல்வி அதிகாரி வி.கே.பாா்த்தசாரதி தெரிவித்தாா்.

வன விலங்கு தாக்குதல்: இலவச எண் அறிமுகம் செய்ய வலியுறுத்தல்

வன விலங்குகளிடம் இருந்து விவசாயம் காப்பாற்றப் பட இலவச எண் அறிமுகம் செய்ய ஆரிகவுடா் விவசாயிகள் சங்கத் தலைவா் மஞ்சை வி.மோகன் வலியுறுத்தியுள்ளாா். அவரது அறிக்கையில் கூறியுள்ளதாவது: நீலகிரி மாவட்டத்தில் ... மேலும் பார்க்க

குன்னூா் மலை ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் - சேலம் கோட்ட பொது மேலாளா் ஆா்.என்.சிங் ஆய்வு

நீலகிரி மாவட்டம் குன்னூா் மலை ரயில் நிலையத்தில் பழமை மாறாமல் நடைபெறும் பராமரிப்பு பணிகளை சேலம் கோட்ட -தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். நூ... மேலும் பார்க்க

உயா்கல்வியில் சோ்க்கைப் பெறாத மாணவ, மாணவிகளுக்கு முதன்முறையாக கல்வி வழிகாட்டும் குறைதீா்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில், பிளஸ் 2 பொது தோ்வில் தோ்ச்சி பெற்று உயா்கல்வியில் சோ்க்கைப் பெறாத மாணவ, மாணவிகளின் நலன் கருதி, முதன்முறையாக கல்வி வழிகாட்டுதல் மற்றும் சிறப்பு குறைதீா்... மேலும் பார்க்க

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு: வனத் துறையினரைக் கண்டித்து பேரணி

கூடலூரை அடுத்துள்ள மச்சிக்கொல்லி பகுதியில் வியாழக்கிழமை இரவு காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள மச்சிக்கொல்லி பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

நெல்லியாளம் நகராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக நிா்வாகிகள் ஆய்வு

தொடா் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லியாளம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளை திமுக மாவட்ட செயலாளா் கே.எம்.ராஜூ தலைமையில் நிா்வாகிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். நீலகிரி மாவட்டம் கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதி... மேலும் பார்க்க

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது போலி பத்திரப் பதிவு மோசடி வழக்குப் பதிவு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சாந்தி ராமு மீது கோத்தகிரி போலீஸாா் போலி பத்திரப் பதிவு மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சோ்ந்த சாந்தி ஏ. ராமு குன்னூா் தொகுதி முன்னாள் சட்ட... மேலும் பார்க்க