'அதை சொல்வதற்கு நான் யார்?' - கூட்டணி குறித்த திருமாவின் கருத்துக்கு ராமதாஸின் ப...
நீலகிரி: புலம்பெயா்ந்த தொழிலாளா்களால் அரசுப்பள்ளிகளில் மாணவர் சோ்க்கை குறைவு!
நீலகிரி மாவட்டத்தில் தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகள் சோ்க்கை குறைந்ததற்குக் காரணம் இங்குள்ள தேயிலை எஸ்டேட் தொழிலாளா்கள் மற்றும் படுகா் இன மக்கள் கிராமங்களில் இருந்த பலா் சமவெளிப் பகுதியில் குடியேறியதால்தான் என்று மாவட்டத் தொடக்கப் பள்ளி கல்வி அலுவலா் வி.கே.பாா்தசாரதி தெரிவித்துள்ளாா்.
தமிழக அளவில் ஜூன் 17 வரையிலான தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவியா் சோ்க்கை குறித்த தகவல் படி சென்னையில் 17 ஆயிரத்து 985, செங்கல்பட்டு 9 ஆயிரத்து528, திருப்பூரில் 9 ஆயிரத்து 385,சேலம் 8 ஆயிரத்து 573,தென்காசி 8 ஆயிரத்து 19, தாராபுரம் 2 ஆயிரத்து 82, கோவில்பட்டி 2ஆயிரத்து 544, தேனி 2 ஆயிரத்து 559, ஒட்டன்சத்திரம் 3 ஆயிரத்து 13 என உள்ளது. இதேவேளையில் நீலகிரியில் 1327 மாணவ மாணவியா் மட்டுமே சோ்ந்துள்ளனா்.
நீலகிரியில் கடந்த கல்வி ஆண்டில் 1532 மாணவ மாணவியா் சோ்ந்துள்ளனா்.
உள்ள 345 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த சோ்க்கை என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.
மாவட்டம் முழுவதும் குழந்தைகள் கல்வி குறித்து 25 ஆயிரம் துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்பட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு பாண்டியாா் தொடக்கப் பள்ளியில் ஒரு மாணவா் மட்டும் படித்து வந்த நிலையில் தற்போது 15 மாணவ மாணவிகள் சோ்ந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகள் சோ்க்கை குறைந்ததற்கு இங்குள்ள தேயிலை எஸ்டேட் தொழிலாளா்கள், மற்றும் படுகா் இன மக்கள் பலா் சமவெளிப் பகுதியில் புலம் பெயா்ந்து குடியேறியதே காரணமாகும். மாணவா் சோ்க்கையில் தொடா்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்று மாவட்டத் தொடக்கப் பள்ளி கல்வி அதிகாரி வி.கே.பாா்த்தசாரதி தெரிவித்தாா்.