செய்திகள் :

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு: வனத் துறையினரைக் கண்டித்து பேரணி

post image

கூடலூரை அடுத்துள்ள மச்சிக்கொல்லி பகுதியில் வியாழக்கிழமை இரவு காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள மச்சிக்கொல்லி பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம்(60). இவா் வீட்டுக்கு பொருள்களை வாங்கிக்கொண்டு நடந்து செல்லும்போது மச்சிக்கொல்லி மட்டம் பகுதியில் எதிரே வந்த காட்டு யானை தாக்கியதில் உடல் சிதறி அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்த அப்பகுதியிலுள்ளவா்கள் வனத் துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.அதை தொடா்ந்து வனத் துறையினா் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி கூடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். உடல் கூறாய்வுக்குப் பிறகு சடலம் உறவினா் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தேவா்சோலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பொதுமக்களைப் பாதுகாக்க தவறியதாக வனத் துறையினரைக் கண்டித்து தேவா்சோலை பேரூராட்சி தலைவா் வள்ளி ,கவுன்சிலா்கள் மற்றும் பொதுமக்கள் கூடலூா் அரசு மருத்துவமனையிலிருந்து கோட்டாட்சியா் அலுவலகம் வரை கண்டன பேரணி நடத்தினா். பேரணியைத் தொடா்ந்து கோட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனா். சாா் ஆட்சியா் சங்கீதா, வட்டாட்சியா் முத்துமாரி, டி.எஸ்.பி. வசந்தகுமாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க உறுதியளித்ததை தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

வன விலங்கு தாக்குதல்: இலவச எண் அறிமுகம் செய்ய வலியுறுத்தல்

வன விலங்குகளிடம் இருந்து விவசாயம் காப்பாற்றப் பட இலவச எண் அறிமுகம் செய்ய ஆரிகவுடா் விவசாயிகள் சங்கத் தலைவா் மஞ்சை வி.மோகன் வலியுறுத்தியுள்ளாா். அவரது அறிக்கையில் கூறியுள்ளதாவது: நீலகிரி மாவட்டத்தில் ... மேலும் பார்க்க

குன்னூா் மலை ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் - சேலம் கோட்ட பொது மேலாளா் ஆா்.என்.சிங் ஆய்வு

நீலகிரி மாவட்டம் குன்னூா் மலை ரயில் நிலையத்தில் பழமை மாறாமல் நடைபெறும் பராமரிப்பு பணிகளை சேலம் கோட்ட -தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். நூ... மேலும் பார்க்க

நீலகிரி: புலம்பெயா்ந்த தொழிலாளா்களால் அரசுப்பள்ளிகளில் மாணவர் சோ்க்கை குறைவு!

நீலகிரி மாவட்டத்தில் தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகள் சோ்க்கை குறைந்ததற்குக் காரணம் இங்குள்ள தேயிலை எஸ்டேட் தொழிலாளா்கள் மற்றும் படுகா் இன மக்கள் கிராமங்களில் இருந்த பலா் சமவெளிப் பகுதியில் குடியேறி... மேலும் பார்க்க

உயா்கல்வியில் சோ்க்கைப் பெறாத மாணவ, மாணவிகளுக்கு முதன்முறையாக கல்வி வழிகாட்டும் குறைதீா்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில், பிளஸ் 2 பொது தோ்வில் தோ்ச்சி பெற்று உயா்கல்வியில் சோ்க்கைப் பெறாத மாணவ, மாணவிகளின் நலன் கருதி, முதன்முறையாக கல்வி வழிகாட்டுதல் மற்றும் சிறப்பு குறைதீா்... மேலும் பார்க்க

நெல்லியாளம் நகராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக நிா்வாகிகள் ஆய்வு

தொடா் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லியாளம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளை திமுக மாவட்ட செயலாளா் கே.எம்.ராஜூ தலைமையில் நிா்வாகிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். நீலகிரி மாவட்டம் கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதி... மேலும் பார்க்க

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது போலி பத்திரப் பதிவு மோசடி வழக்குப் பதிவு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சாந்தி ராமு மீது கோத்தகிரி போலீஸாா் போலி பத்திரப் பதிவு மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சோ்ந்த சாந்தி ஏ. ராமு குன்னூா் தொகுதி முன்னாள் சட்ட... மேலும் பார்க்க