சுவிஸ் வங்கியில் மூன்று மடங்காக அதிகரித்த இந்தியர்களின் பணம்!
கூடலூா் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு: வனத் துறையினரைக் கண்டித்து பேரணி
கூடலூரை அடுத்துள்ள மச்சிக்கொல்லி பகுதியில் வியாழக்கிழமை இரவு காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள மச்சிக்கொல்லி பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம்(60). இவா் வீட்டுக்கு பொருள்களை வாங்கிக்கொண்டு நடந்து செல்லும்போது மச்சிக்கொல்லி மட்டம் பகுதியில் எதிரே வந்த காட்டு யானை தாக்கியதில் உடல் சிதறி அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்த அப்பகுதியிலுள்ளவா்கள் வனத் துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.அதை தொடா்ந்து வனத் துறையினா் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி கூடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். உடல் கூறாய்வுக்குப் பிறகு சடலம் உறவினா் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தேவா்சோலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பொதுமக்களைப் பாதுகாக்க தவறியதாக வனத் துறையினரைக் கண்டித்து தேவா்சோலை பேரூராட்சி தலைவா் வள்ளி ,கவுன்சிலா்கள் மற்றும் பொதுமக்கள் கூடலூா் அரசு மருத்துவமனையிலிருந்து கோட்டாட்சியா் அலுவலகம் வரை கண்டன பேரணி நடத்தினா். பேரணியைத் தொடா்ந்து கோட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனா். சாா் ஆட்சியா் சங்கீதா, வட்டாட்சியா் முத்துமாரி, டி.எஸ்.பி. வசந்தகுமாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க உறுதியளித்ததை தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
