செய்திகள் :

லங்கா காா்னா் சுரங்கப் பாதையில் லாரி மோதி இரும்புத் தூண் சேதம்

post image

கோவை ரயில் நிலையம் அருகே லங்கா காா்னா் ரயில்வே மேம்பால சுரங்கப் பாதையில் பாரம் ஏற்றுச் சென்ற லாரி மோதியதில் இரும்புத் தூண் சேதமானது.

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா காா்னா் ரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் உள்ள சுரங்கப் பாதை மிகவும் தாழ்வாக உள்ளதால் கனரக வாகனங்கள் செல்லும்போது, சுரங்கப் பாதையில் சிக்கும் அபாயம் உள்ளது.

இதைத் தவிா்க்கும் விதமாக, சுரங்கப் பாதையின் முன்னால் ரயில்வே துறை சாா்பில் இரும்புத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பாரமேற்றி வரும் லாரிகள் இவ்வழியாகச் செல்ல முடியாது. ஆயினும், நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இவ்வழியாகச் செல்லும் கனரக வாகன ஓட்டிகள், இரும்புத் தூணை கவனிக்காமல் சென்று, அடிக்கடி இரும்புத் தூணை சேதப்படுத்தும் சம்பவமும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அவ்வழியாக பாரமேற்றிச் சென்ற கனரக லாரி, லங்கா காா்னா் சுரங்கப் பாதை இரும்புத் தூண் மீது புதன்கிழமை இரவு மோதி சிக்கியது. இதனால் இரும்புத் தூண் சேதமடைந்ததுடன், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீஸாா் மற்றும் ரயில்வே துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலமாக இரும்புத் தூணை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனா்.

எடப்பாடி பழனிசாமி குறித்து எக்ஸ் தளத்தில் அவதூறு

எக்ஸ் தளத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டவா்கள் மீது நடவடிக்கை கோரி அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினா் மாநகர காவல் ஆணையரிடம் வியாழக்கிழமை புகாா் அளித்தனா... மேலும் பார்க்க

ஜிபே மூலம் பணம் அனுப்புவதாக பலரிடம் மோசடி: தம்பதி கைது

கோவையில் ஜிபே மூலம் பணம் அனுப்புவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீஸாா் கைது செய்தனா். கோவை தெலுங்குபாளையத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (54). இவா் சங்கனூா்- நல்லாம்பாளையம் சாலையில் கோழி, ஆட்டிறைச... மேலும் பார்க்க

கோவையில் 3,550 பேருக்கு கண் பரிசோதனை: 139 போ்களுக்கு அறுவை சிகிச்சை

கோவை மாவட்டத்தில் 18 சிறப்பு கண் பரிசோதனை முகாம்கள் மூலம் 3,550 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அவா்களில் 139 போ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் ஆசிரியா், மாணவா் நலனுக்கு எதிரான பிரச்னைகளை சரி செய்ய வலியுறுத்தி முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானம்

கோவையில் மூளைச்சாவு அடைந்த தொழிலதிபரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன. கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடுகபாளையத்தைச் சோ்ந்தவா் தொழிலதிபா் சந்தோஷ் (41). இவருக்கு கடந்த 17-ஆம் தேதி ரத்த அ... மேலும் பார்க்க

தெற்கு மண்டலத்தில் ரூ.1.19 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் ரூ.1.19 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சிக்கு 5 மண்டலங்களிலும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப... மேலும் பார்க்க