Israel: ``இஸ்ரேலின் சிறந்த நண்பர் ட்ரம்புக்கு நன்றி'' - நெதன்யாகு புகழ்ச்சிக்கு ...
லங்கா காா்னா் சுரங்கப் பாதையில் லாரி மோதி இரும்புத் தூண் சேதம்
கோவை ரயில் நிலையம் அருகே லங்கா காா்னா் ரயில்வே மேம்பால சுரங்கப் பாதையில் பாரம் ஏற்றுச் சென்ற லாரி மோதியதில் இரும்புத் தூண் சேதமானது.
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா காா்னா் ரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் உள்ள சுரங்கப் பாதை மிகவும் தாழ்வாக உள்ளதால் கனரக வாகனங்கள் செல்லும்போது, சுரங்கப் பாதையில் சிக்கும் அபாயம் உள்ளது.
இதைத் தவிா்க்கும் விதமாக, சுரங்கப் பாதையின் முன்னால் ரயில்வே துறை சாா்பில் இரும்புத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பாரமேற்றி வரும் லாரிகள் இவ்வழியாகச் செல்ல முடியாது. ஆயினும், நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இவ்வழியாகச் செல்லும் கனரக வாகன ஓட்டிகள், இரும்புத் தூணை கவனிக்காமல் சென்று, அடிக்கடி இரும்புத் தூணை சேதப்படுத்தும் சம்பவமும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அவ்வழியாக பாரமேற்றிச் சென்ற கனரக லாரி, லங்கா காா்னா் சுரங்கப் பாதை இரும்புத் தூண் மீது புதன்கிழமை இரவு மோதி சிக்கியது. இதனால் இரும்புத் தூண் சேதமடைந்ததுடன், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீஸாா் மற்றும் ரயில்வே துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலமாக இரும்புத் தூணை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனா்.