செய்திகள் :

``திருமணத்திற்கு வராத விருந்தினர்களுக்கு ரூ.4,339 அபராதம்'' - மணமகள் சொல்வது என்ன? வைரலாகும் பதிவு

post image

திருமணம் என்றாலே பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். கேட்டரிங் முதல் டெக்கரேஷன் வரை திருமண நிகழ்விற்காக ஒரு பெரிய தொகையை செலவிடுவார்கள்.

குறிப்பாக விருந்தினர்களின் எண்ணிக்கை பொறுத்து உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

சில திருமண நிகழ்வுகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும், அல்லது உணவு மீதமாகிவிடும். இதற்காக யாரும் இழப்பீடு கேட்டு கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.

அமெரிக்காவின் மினசோட்டா என்ற பகுதியில் நடந்த திருமணத்தில், வர முடியாமல் போன விருந்தினர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று மணமகள் கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Reddit பயனரின் கூற்றுப்படி, கடைசி நிமிடத்தில் அவரின் அம்மா உள்பட சில விருந்தினர்கள் திருமணத்திற்கு கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. இதற்காக அந்த மணமகள் அபராதம் விதிக்கும் அளவிற்கு சென்றுவிட்டார்.

ஒவ்வொரு தட்டுக்கும் $50 (தோராயமாக ரூ.4,339) செலவு செய்திருக்கிறார். திருமணத்தை தவறவிட்ட விருந்தினர்கள் இதனை திருப்பி செலுத்த வேண்டும் என்று மணமகள் கூறியிருக்கிறார்.

இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பல பயனர்கள் RSVP விருந்தினர்கள் இதுபோன்ற இழப்புகளைத் தவிர்க்க உதவும் என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

RSVP என்பது விருந்தினர்கள் நிகழ்வில் கலந்து கொள்வார்களா என்பதை உறுதிப்படுத்த அழைப்பிதழில் உள்ள கோரிக்கையாகும். இந்த அபராதம் விதிக்கும் பதிவு இணையத்தில் பலரின் கவனத்தை பெற்று வருகிறது.

ஒரே சமயத்தில் தேர்வெழுதிய தந்தை, மகன் போலீஸ் வேலைக்கு தேர்வு.. ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு!

படிப்புக்கும், வேலைக்கும் வயது ஒரு தடை கிடையாது என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் பார்த்து வருகிறோம்.உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகில் உள்ள உதயராம்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் யஷ்பால் சிங்(41).... மேலும் பார்க்க

ஹைதராபாத் மேம்பாலத்தில் ஓட்டமெடுத்த ஒட்டகம்; சவாரியில் சிக்கிய இளைஞரை மீட்ட சம்பவம்.. வைரல் காட்சி!

ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான மேம்பாலத்தில், ஒருவர் ஒட்டகத்தின் மீது ஆபத்தான முறையில் சவாரி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தின் பி.வி. நரசிம்மராவ் விரைவுச் சாலையில் இந்த சம்பவம் நடந... மேலும் பார்க்க

Telegram: ``நான் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அப்பா'' - டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ்

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov) 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பிரெஞ்சு பத்திரிகையான லு பாயிண்டி செய்தியிடம் அளித்த பேட்டியி... மேலும் பார்க்க

Iran Vs Israel: ``அணு ஆயுதம் தயாரிக்கும் உலை மீது குண்டு விழுந்தால் என்னவாகும்?'' - ஓர் அலசல்!

ஈரானிலும் - இஸ்ரேலிலும் தொடர்ந்து குண்டுமழைப் பொழிகிறது. இதில் அதிகளவில் பாதிக்கப்படுவது இருதரப்பிலிருந்தும் அப்பாவி மக்கள்தான். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என எந்த நாடும் பேச்சுவார்த்த... மேலும் பார்க்க

``ரூ.7500 சாம்சங் போனில் ஆரம்பித்தேன்; இப்போ பிசினஸ் ஸ்டார்..'' - சாதித்து காட்டிய தன்னம்பிக்கை பெண்

இணையதளம் வருமானம் ஈட்டுவதற்கான பல வழிகளையும் திறந்துவிட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இப்போதெல்லாம் பலரும் யூடியூப் சேனலைத் தொடங்கி விதவிதமாக வீடியோக்களை தயாரித்து சம்பாதித்து வருகின்றனர். அந்தவகையில... மேலும் பார்க்க

மனைவிக்கு தாலி வாங்க வந்த 93 வயது முதியவர்; கடைகாரரின் செயலால் நெகிழ்ந்த தம்பதி! - வைரல் வீடியோ!

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் இருக்கும் ஒரு நகைக்கடைக்கு, 93 வயது முதியவர் தன் மனைவியுடன் வருகிறார். அவரை வரவேற்ற கடை உரிமையாளர் என்ன வேண்டும்? எனக் கேட்கிறார். அதற்கு அந்த முதியவர், ``இவ... மேலும் பார்க்க