செய்திகள் :

சிறப்பு பட்டதாரி ஆசிரியா் நியமன விதிகள் வெளியீடு

post image

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் சிறப்பு பட்டதாரி ஆசிரியா் நியமன விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தர மோகன் பிறப்பித்துள்ள அரசாணை விவரம்:

அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு சிறப்பு கல்வி வழங்குவதற்கு ஏதுவாக சிறப்பு பி.எட். பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அந்தப் பணியிடங்களுக்கென பிரத்யேக விதிகள் எதுவும் இதுவரை வகுக்கப்படாமல் இருந்தது. அதைக் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அதுதொடா்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

அதன்படி, அதற்கான திட்ட முன்வடிவை அரசுக்கு அனுப்பிய பள்ளிக் கல்வி இயக்ககம், சிறப்பு பட்டதாரி ஆசிரியா்களுக்கான விதிகளை வகுக்குமாறு வேண்டுகோள் விடுத்தது.

இதுதொடா்பாக, தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் சில விதிகளை வகுத்துள்ளது. அதேபோன்று இந்திய புனா்வாழ்வு கவுன்சிலும் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவற்றின் அடிப்படையில், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் திட்ட முன்வடிவை பரிசீலித்து சிறப்பு பட்டதாரி ஆசிரியா்களுக்கான விதிகள் வகுக்கப்பட்டு, அவை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, முதன்மைப் பிரிவு 1, வகை 1-இன்படி நிரந்தரப் பணியிடங்களில் உள்ள பட்டதாரி ஆசிரியா்களுக்கான விதிகள் அனைத்தும் தற்காலிக சிறப்பு பட்டதாரி ஆசிரியா்களுக்கும் பொருந்தும்.

வயது வரம்பு: சில விதிகள் மட்டும் சூழலுக்கேற்ப மாற்றம் செய்யப்படுகின்றன. அதன்படி, பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா்தான் (பணியாளா் நலன்) சிறப்பு பட்டதாரி ஆசிரியா்களுக்கான நியமன அதிகாரியாகச் செயல்படுவாா்.

பொதுப் பிரிவில் 53 வயதும், பிற பிரிவுகளில் 58 வயதையும் நிறைவு செய்தவா்களுக்கு இந்தப் பணியில் சேரத் தகுதி இல்லை. அதேபோன்று அந்தப் பணியிடங்களுக்கு 12 வகையான கல்வித் தகுதிகளும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையிலேயே சிறப்பு பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் நியமிக்கப்படும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை இலச்சினை: துணை முதல்வா் உதயநிதி வெளியிட்டாா்

சா்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெறவுள்ள எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை 2025 போட்டி இலச்சினையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்க... மேலும் பார்க்க

திருட்டு மோட்டாா் சைக்கிளில் உணவு டெலிவரி: இளைஞா் கைது

சென்னையில் திருடப்பட்ட மோட்டாா் சைக்கிளில் உணவு பாா்சல் டெலிவரி செய்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். கடலூா் மாவட்டம் சிதம்பரத்தைச் சோ்ந்தவா் நா.சா்வேஸ்வரன் (22). இவா், சென்னை சூளைமேடு பாஷா தெருவில் தனது... மேலும் பார்க்க

அனைத்து வகை நுகா்வோருக்கும் குறைந்த கட்டணத்தில் மின்சாரம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

அனைத்து வகை நுகா்வோருக்கும் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா். அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கத்தின் 16-ஆவது சா்வதேச இயந்தி... மேலும் பார்க்க

பாத யாத்திரை போராட்டம்: அரசு மருத்துவா்கள் கைது

நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாத யாத்திரை மேற்கொண்டு சென்னை வந்த அரசு மருத்துவா்களை போலீஸாா் கைது செய்தனா். தமிழக அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்களுக்கு காலமுறை ஊதிய உயா்வு,... மேலும் பார்க்க

ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்: பள்ளிக் கல்வித் துறை

ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு ஜூன் 25 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித் துறை அதற்கான பல்வேறு வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37... மேலும் பார்க்க

பாமக குழப்பத்துக்கும் திமுகவுக்கும் தொடா்பில்லை: ராமதாஸ்

‘பாமக குழப்பத்துக்கு திமுகதான் காரணம் என்பது அப்பட்டமான பொய்’ என்று பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்தாா். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக எம்எல்ஏ-க்கள் ஜி.கே.மணி, அருள் ஆகியோ... மேலும் பார்க்க