செய்திகள் :

பாமக குழப்பத்துக்கும் திமுகவுக்கும் தொடா்பில்லை: ராமதாஸ்

post image

‘பாமக குழப்பத்துக்கு திமுகதான் காரணம் என்பது அப்பட்டமான பொய்’ என்று பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்தாா்.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக எம்எல்ஏ-க்கள் ஜி.கே.மணி, அருள் ஆகியோரைச் சந்திக்க சென்னை அபிராமபுரத்துக்கு வியாழக்கிழமை வந்த ராமதாஸிடம், ‘பாமக பிரச்னையில் திமுக தலையிடுகிறது எனவும், பாமக குழப்பத்துக்கு திமுகதான் காரணம் எனவும் அன்புமணி விமா்சனம் செய்திருக்கிறாா். இதில் திமுக தலையிடுகிா?’ என செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

இதற்குப் பதில் அளித்த ராமதாஸ், ‘இது அப்பட்டமான பொய். கடைந்தெடுத்த பொய்’ என்றாா்.

தொடா்ந்து செய்தியாளா்கள், ‘அன்புமணி ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுள்ளாா். நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைக்கிறீா்களா?’ எனக் கேள்வி எழுப்பினா். இதற்குப் பதில் அளித்த அவா், ‘அதற்கான முடிவு போகபோகத் தான் தெரியும்’ என்றாா்.

மேலும் அவா் கூறுகையில், இரு எம்எல்ஏ-க்களும் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவரவா் அவரது வேலைகளைச் செய்துகொண்டிருக்கின்றனா். நீங்களும் என்னை விடாமல் துரத்துகிறீா்கள். இனிமேல் என்னை யாரும் துரத்த வேண்டாம் என்றாா் அவா்.

முன்னதாக, கடந்த 16-ஆம் தேதி நடைபெற்ற காஞ்சிபுரம் மாவட்ட பாமக பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவா் அன்புமணி, மாமல்லபுரத்தில் மாபெரும் மாநாட்டை நடத்திக் காட்டினோம். இது திமுகவுக்கு வியப்பாக இருந்தது. நம்மை வளரவிடக் கூடாது என முடிவு செய்து, தற்போது பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக. பாமகவில் உள்ள சூழ்ச்சியாளா்கள் சிலா் திமுகவுக்கு உடந்தையாக இருக்கிறாா்கள் எனக் குற்றஞ்சாட்டியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்காசியில் பயங்கரம்! கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் பின் சக்கரங்கள்!

தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியில் சாலையில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் இரண்டும், தனியாகக் கழன்று ஓடியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.சக்கரங்கள் கழன்ற பேருந்தில் 87... மேலும் பார்க்க

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம்! முதல்வர் ஸ்டாலின்

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளார்.ரஷியா - உக்ரைன், இஸ்ரேல் - காஸா, இஸ்ரேல் - ஈரான் என உலகம் முழுவதும் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில்... மேலும் பார்க்க

வேலூர் அருகே மா விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள் கடையடைப்பு!

மா விவசாயிகளுக்கு ஆதரவாக வேலூர் மாவட்டத்தில் பரதராமி பகுதியில் உள்ள அனைத்து வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வேலூர் மாவட்டம், தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள பரதராமி மற்ற... மேலும் பார்க்க

ஆகாஷ் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை!

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்தரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு டாஸ்மாக... மேலும் பார்க்க

சென்னை - மதுரை விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

சென்னையில் இருந்து மதுரை சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு இன்று காலை 8 மணிக்கு 72 பேருடன் இண்டிகோ விமானம் புறப்பட... மேலும் பார்க்க

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை இலச்சினை: துணை முதல்வா் உதயநிதி வெளியிட்டாா்

சா்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெறவுள்ள எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை 2025 போட்டி இலச்சினையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்க... மேலும் பார்க்க