மருத்துவமனையில் ஜி.கே.மணியை சந்தித்து நலம் விசாரித்த ராமதாஸ்!
சஞ்சய் வெர்மா யார்? தேனிலவு கொலையில் திடீர் திருப்பம்!
மேகாலயத்தில் நடந்த தேனிலவு கொலையில், இதுவரை சஞ்சய் வெர்மா யார் என்ற கேள்விக்கு காவல்துறையினர் விடை கண்டுபிடித்துள்ளனர்.
கணவர் ராஜா ரகுவன்ஷியை, மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கூலிப் படை வைத்துக் கொலை செய்த சோனம், தனது காதலன் ராஜ் குஷ்வாஹா பயன்படுத்திய செல்போன் எண்ணைத்தான், அவர் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, சஞ்சய் வெர்மா என்ற கற்பனைப் பெயரில் செல்போனில் பதிவு செய்திருந்ததைக் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
செல்போன் எண்களின் விவரங்களை அறியும் தனியார் செயலிகளிலும் இந்த எண் சஞ்சய் வெர்மா என்று பதிவாகியிருந்ததால், காவல்துறையினருக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த எண்ணை ராஜ் குஷ்வாஹா பயன்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குஷ்வாஹா எண்ணை யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, சஞ்சய் என்று சோனம் பதிவு செய்து வைத்திருந்தார். இந்த எண்ணிலிருந்து, சோனம் செல்போன் எண்ணுக்கு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8 வரை அதாவது 39 நாள்களில் 234 முறை அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும் குறைந்தது 30 முதல் 60 வினாடிகள் பேசப்பட்டுள்ளதும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.