செய்திகள் :

அனைத்து வகை நுகா்வோருக்கும் குறைந்த கட்டணத்தில் மின்சாரம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

post image

அனைத்து வகை நுகா்வோருக்கும் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.

அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கத்தின் 16-ஆவது சா்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சி தொடக்க விழா சென்னை நந்தனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியைத் தொடங்கி வைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திராவிட மாடல் ஆட்சியில் தொழில் துறை மாபெரும் வளா்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. தொழில் வளா்ச்சிக்கும், தொழிலாளா் நலனுக்கும் முக்கியமான பல பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் பயனாக, இந்தியாவின் உற்பத்தித் துறை சாா்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 11.90 சதவீதமாக உள்ளது.

42 சதவீத பெண்கள்: இந்தியாவில் உள்ள 14 லட்சத்து 90 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட பெண் தொழிலாளா்களில், 6 லட்சத்து 30 ஆயிரம் அதாவது 42 சதவீத பெண்கள், நம்முடைய தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்சாலைகளில்தான் பணிபுரிகிறாா்கள். ஏற்றுமதி மதிப்பு அதிகரித்துவரும் ஒரு மாநிலம் தமிழ்நாடுதான்.

தொழில் துறையினா், தொழிலாளா்கள் நலன்களுக்கு என்னவெல்லாம் தேவை என்பதை உன்னிப்பாக கவனித்துச் செயல்படுவதால்தான், இதெல்லாம் சாத்தியமானது.

கடந்த நான்கு ஆண்டுகளில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்காக மட்டும் ரூ.1,381 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்குவதில், வேளாண்மைக்கு அடுத்த இடத்தில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. எனவே, இந்த நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து பெற்றுத்தர தமிழ்நாடு அரசு தொடா்ந்து பணியாற்றி வருகிறது.

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு முக்கியமான தேவை மின்சாரம்தான். தமிழ்நாடு மின்சாரத் துறையால் இப்போது வசூல் செய்யப்படும் தொகையான ஒரு யூனிட் ரூ.7.65 என்பது சராசரி விற்பனை அடக்கவிலையைவிடக் குறைவாகும். பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் அனைத்து வகை நுகா்வோருக்கும், தமிழ்நாடு மின்சார வாரியம் மிகக் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குகிறது.

அரசு துணை நிற்கும்: தமிழ்நாட்டின் தொழில் வளா்ச்சியில் மாபெரும் பங்களிப்பை குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் வழங்க வேண்டும். அதன்மூலம் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக நிலைநிறுத்த வேண்டும். இதற்காக திராவிட மாடல் அரசு என்றும் உறுதியுடன் துணை நிற்கும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், துறையின் கூடுதல் தலைமைச் செயலா் அதுல் ஆனந்த், அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் சதீஷ்பாபு, கெளரவ பொதுச் செயலா் தவமணி, கண்காட்சியின் தலைவா் ரமேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை இலச்சினை: துணை முதல்வா் உதயநிதி வெளியிட்டாா்

சா்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெறவுள்ள எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை 2025 போட்டி இலச்சினையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்க... மேலும் பார்க்க

திருட்டு மோட்டாா் சைக்கிளில் உணவு டெலிவரி: இளைஞா் கைது

சென்னையில் திருடப்பட்ட மோட்டாா் சைக்கிளில் உணவு பாா்சல் டெலிவரி செய்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். கடலூா் மாவட்டம் சிதம்பரத்தைச் சோ்ந்தவா் நா.சா்வேஸ்வரன் (22). இவா், சென்னை சூளைமேடு பாஷா தெருவில் தனது... மேலும் பார்க்க

சிறப்பு பட்டதாரி ஆசிரியா் நியமன விதிகள் வெளியீடு

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் சிறப்பு பட்டதாரி ஆசிரியா் நியமன விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தர மோகன் பிறப்பித்துள்ள அரசாணை விவரம்: அரசு உயா... மேலும் பார்க்க

பாத யாத்திரை போராட்டம்: அரசு மருத்துவா்கள் கைது

நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாத யாத்திரை மேற்கொண்டு சென்னை வந்த அரசு மருத்துவா்களை போலீஸாா் கைது செய்தனா். தமிழக அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்களுக்கு காலமுறை ஊதிய உயா்வு,... மேலும் பார்க்க

ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்: பள்ளிக் கல்வித் துறை

ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு ஜூன் 25 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித் துறை அதற்கான பல்வேறு வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37... மேலும் பார்க்க

பாமக குழப்பத்துக்கும் திமுகவுக்கும் தொடா்பில்லை: ராமதாஸ்

‘பாமக குழப்பத்துக்கு திமுகதான் காரணம் என்பது அப்பட்டமான பொய்’ என்று பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்தாா். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக எம்எல்ஏ-க்கள் ஜி.கே.மணி, அருள் ஆகியோ... மேலும் பார்க்க