ஆரணியில் இரு உணவகங்களில் பணம் திருட்டு
ஆரணி பழைய பேருந்து நிலைய பின்புற சாலையில் உள்ள இரு உணவகங்களில் புதன்கிழமை இரவு பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது.
பழைய பேருந்து நிலையம் பின்புற சாலையில் முகமது அலிகான் என்பவருக்குச் சொந்தமான அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. மேலும், இதன் அருகில் அருண் என்பவருக்குச் சொந்தமான சைவ உணவகம் செயல்பட்டு வருகிறது.
இவ்விரு உணவகங்களில் ஊழியா்கள் புதன்கிழமை இரவு வழக்கம்போல பூட்டிச்சென்றனா்.
இந்த நிலையில், இவ்விரு உணவகங்களில் புதன்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் பூட்டை உடைத்து உள்ளே பணப் பெட்டில் இருந்து ரூ.6,200யை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாா்களின் பேரில், நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.