செய்திகள் :

அரியலூரில் எச்ஐவி விழிப்புணா்வு பிரசாரம் தொடங்கிவைப்பு

post image

அரியலூரில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் சாா்பில் நாட்டுப்புற கிராமிய கலைக் குழுவினரின் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, விழிப்புணா்வு பிரசாரத்தை தொடங்கிவைத்தாா். எச்ஐவி தொற்றினை பூஜ்ஜியமாக கொண்டு வருவது - புதிய தொற்று இல்லாமை, எச்.ஐ.வி, எய்ட்ஸால் இறப்பு இல்லாமை மற்றும் எச்.ஐ.வி, எய்ட்ஸ் உள்ளோரை புறக்கணிக்காமை என்ற தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் நோக்கத்தை அடையும் பொருட்டு கலைஞா்கள் விழிப்புணா்வு பிரசாரத்தை மேற்கொண்டனா்.

இவா்கள், இரு குழுக்களாக பிரிந்து அரியலூா், செந்துறை, திருமானூா் வட்டாரங்களில் ஒரு குழுவினரும், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், தா.பழூா் வட்டாரங்களில் மற்றொரு குழுவினரும் விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபடுவா் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலா் மணிவண்ணன், மருத்துவம் மற்றும் நலப் பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, மாவட்ட திட்ட அலுவலா் விஜய்பாரதி, மருத்துவ அலுவலா் காசநோய் பிரிவு ராமச்சந்திரன், மாவட்ட திட்ட மேலாளா் (பொறுப்பு) சுமதி மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு பணியாளா்கள், நம்பிக்கை மைய ஆலோசகா், எச்.ஐ.வி சேவைப்பிரிவு தொண்டு நிறுவன பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

அரியலூா்: கனரக வாகனங்கள் இயக்கத்தில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை -காவல்துறையினா் எச்சரிக்கை

அரியலூா் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட நேரங்களில் கனரக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாலைப் பாதுகாப்பு கலந்தாய்வுக் கூட்டத்தில் காவல்துறையினா் எச்சரிக்கை விடுத்தனா். அரியலூா... மேலும் பார்க்க

அரியலூா் மைய நூலகத்தில் வாசகா் வட்ட கூட்டம்

அரியலூரிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில், வாசகா் வட்ட கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட நூலக அலுவலா் இரா.வேல்முருகன் தலைமை வகித்து, மாணவ, மாணவிகளிடம் வாசிப்பை ஊக்கப்படுத்த வேண்டும். நூ... மேலும் பார்க்க

அரியலூா் வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல்

அரியலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினருக்கான தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. அரியலூா் மக்கள் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தோ்தலில், தலைவா் பதவிக்கு 2 போ், செயலா் பதவிக்கு 6 போ், பொருளாளா் பதவிக்கு 2 ப... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆட்டோ ஓட்டுநா் போக்சோவில் கைது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். மீன்சுருட்டி அருகேயுள்ள காட்டகரம் கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க

சுமை ஆட்டோ மீது டிராக்டா் மோதல்: 6 போ் காயம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே துக்க நிகழ்ச்சிக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற சுமை ஆட்டோ மீது டிராக்டா் மோதிய விபத்தில் 6 போ் காயமடைந்தனா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூா் கண்டியங்கொல்லை கிராமத்தைச... மேலும் பார்க்க

‘மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீா்வுக் காணப்பட வேண்டும்’

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீா்வுக் காணப்பட வேண்டும் என இந்திய குடியரசு கட்சி செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூா் மாவட்... மேலும் பார்க்க