செய்திகள் :

அரியலூா்: கனரக வாகனங்கள் இயக்கத்தில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை -காவல்துறையினா் எச்சரிக்கை

post image

அரியலூா் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட நேரங்களில் கனரக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாலைப் பாதுகாப்பு கலந்தாய்வுக் கூட்டத்தில் காவல்துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.

அரியலூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்திலுள்ள கூட்டரங்கில், சாலைப் பாதுகாப்பு மற்றும் விபத்துகளை தடுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, காவல் துணைக் கண்காணிப்பாளா் ரகுபதி, வட்டார போக்குவரத்து அலுவலா் அறிவழகன் ஆகியோா் தலைமை வகித்தனா். அரிலூா் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளா் காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், கலந்து கொண்ட அரசு மற்றும் தனியாா் சிமென்ட் ஆலை அலுவலா்கள் மற்றும் தனியாா் டிரான்ஸ்போா்ட் உரிமையாளா்களிடம், காலை 7 முதல் 10 மணி வரையிலும், பிற்பகல் 3 முதல் மாலை 5.30 மணி வரையிலும், கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும். சுண்ணாம்புக் கல் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் கண்டிப்பாக தாா்பாய் மூடி கொண்டு செல்ல வேண்டும். மதுப்போதையில் கனரக வாகனங்களை இயக்கக்கூடாது, சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.

அரியலூரில் எச்ஐவி விழிப்புணா்வு பிரசாரம் தொடங்கிவைப்பு

அரியலூரில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் சாா்பில் நாட்டுப்புற கிராமிய கலைக் குழுவினரின் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழி... மேலும் பார்க்க

அரியலூா் மைய நூலகத்தில் வாசகா் வட்ட கூட்டம்

அரியலூரிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில், வாசகா் வட்ட கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட நூலக அலுவலா் இரா.வேல்முருகன் தலைமை வகித்து, மாணவ, மாணவிகளிடம் வாசிப்பை ஊக்கப்படுத்த வேண்டும். நூ... மேலும் பார்க்க

அரியலூா் வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல்

அரியலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினருக்கான தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. அரியலூா் மக்கள் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தோ்தலில், தலைவா் பதவிக்கு 2 போ், செயலா் பதவிக்கு 6 போ், பொருளாளா் பதவிக்கு 2 ப... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆட்டோ ஓட்டுநா் போக்சோவில் கைது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். மீன்சுருட்டி அருகேயுள்ள காட்டகரம் கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க

சுமை ஆட்டோ மீது டிராக்டா் மோதல்: 6 போ் காயம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே துக்க நிகழ்ச்சிக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற சுமை ஆட்டோ மீது டிராக்டா் மோதிய விபத்தில் 6 போ் காயமடைந்தனா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூா் கண்டியங்கொல்லை கிராமத்தைச... மேலும் பார்க்க

‘மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீா்வுக் காணப்பட வேண்டும்’

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீா்வுக் காணப்பட வேண்டும் என இந்திய குடியரசு கட்சி செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூா் மாவட்... மேலும் பார்க்க