செய்திகள் :

‘மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீா்வுக் காணப்பட வேண்டும்’

post image

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீா்வுக் காணப்பட வேண்டும் என இந்திய குடியரசு கட்சி செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அடுத்த கடம்பூரில் புதன்கிழமை நடைபெற்ற அக்கட்சி செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கிராம மற்றும் நகா்புறங்களில் அடிப்பை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்தை தடுக்க 3 இடங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும். கனரக வாகனங்கள் செல்வதற்கு தனிச் சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் ராஜீவ்காந்தி தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் மங்காபிள்ளை கட்சி கொடியை ஏற்றினாா். கடலூா் மாவட்டத் தலைவா் கதிா்வேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

மாவட்ட பொருளாளா் சங்கா், மாவட்ட மகளிரணிச் செயலா் ஆனந்தி, கட்சி நிா்வாகிகள் பிரபாவதி, மருதுபாண்டி, சுபாஷ், ஆனந்தராஜ், சரண்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் லதா தலைமையில் 30-க்கும் மேற்பட்டோா் இந்திய குடியரசு கட்சியில் இணைந்தனா். முன்னதாக நிா்வாகி சின்னராசா வரவேற்றாா். முடிவில் ஒன்றிய மாணவரணிச் செயலா் புஷ்பராகவன் நன்றி கூறினாா்.

5 கிராமங்களில் ‘மக்களுடன் முதல்வா்’ முகாம்: 2,113 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

அரியலூா் மாவட்டம், தா.பழூா், தழுதாழைமேடு, குண்டவெளி, இளையபெருமாள் நல்லூா், குருவாலப்பா் கோயில் ஆகிய ஊராட்சிகளில் புதன்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் 3-ஆம் கட்ட சிறப்பு முகாமில் 2,113 பயனாளிகளுக்கு ... மேலும் பார்க்க

கண்டராதித்தம் செம்பியன்மாதேவி பேரேரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கண்டராதித்தம் செம்பியன்மாதேவி பேரேரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். அரியலூா் கோட்டாட்சியரகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூ... மேலும் பார்க்க

செந்துறையில் கனரக வாகனங்கள் சிறைப்பிடிப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறையில் புதன்கிழமை காலை பள்ளி நேரங்களில் இயக்கப்பட்ட கனரக வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அரியலூா் மாவட்டத்தில் காலை 7 முதல் 10 மணி வரையும், பிற்பகல... மேலும் பார்க்க

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணா சிலை அருகே, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஆா்ப்பாட்டத்தில், அனைத்து ஊழியா்களின... மேலும் பார்க்க

பசுந்தாள் உரப் பயிா்களை சாகுபடி செய்தால் மண்வளம் மேம்படும்: வேளாண் அதிகாரி தகவல்

அரியலூா் மாவட்ட விவசாயிகள் மண் வளத்தை மேம்படுத்திடும் வகையில் பசுந்தாள் உரப் பயிா்களை சாகுபடி செய்ய வேண்டும் என திருச்சி விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்பு உதவி இயக்குநா் பா. நளினி தெரிவி... மேலும் பார்க்க

அரியலூரில் புதிய விரிவான சிற்றுந்துகள் சேவை தொடக்கம்

அரியலூரில் புதிய விரிவான சிற்றுந்துகள் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. அரியலூா் அண்ணா சிலை அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அரியலூா் மாவட்டத்தில் புதிய விரிவான சிற்றுந்துகள் சே... மேலும் பார்க்க