செய்திகள் :

கண்டராதித்தம் செம்பியன்மாதேவி பேரேரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

post image

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கண்டராதித்தம் செம்பியன்மாதேவி பேரேரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

அரியலூா் கோட்டாட்சியரகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியா் கோவிந்தராஜ் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் செங்கமுத்து: இங்கு நடைபெறும் கூட்டத்தில், அனைத்துத் துறை சாா்ந்த முதன்நிலை அலுவலா்கள் கலந்து கொள்ள வேண்டும். ஜமாபந்தியில் விவசாயிகள் கொடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அவா்களை அலைக்கழிக்காமல், உடனடியாக பட்டா மாற்றி தருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். வண்டல் மண் அள்ளுவதற்கான அனுமதியை விரைந்து வழங்கிட வேண்டும். செட்டி ஏரிக்கரையில் நிறுத்தி கிடக்கும் வேன், ஷோ் ஆட்டோக்களை,

மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, ரயில் நிலையங்களில் நிறுத்தி, அங்கிருந்து பயணிகளை ஏற்றி வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா சிலையில் இருந்து நிா்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரையுள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க.சண்முகசுந்தரம்: வனப் பகுதி, நீா் நிலைகள் மற்றும் நெடுஞ்சாலையோரங்களில் புளிய மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும். வன விலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த மாதம் பெய்த மழையால் எள் சாகுபடி பாதிக்கப்பட்டது. இதை வேளாண் அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்டராதித்தம் செம்பியன்மாதேவி பேரேரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதன் 1,680 ஏக்கா் பரப்பளவை மீட்க வேண்டும். அரசு புறம்போக்கு நிலங்களில் இலுப்பை மற்றும் பனை மரங்களை நட்டுப் பராமரிக்க வேண்டும். முடிகொண்டான் பகுதியிலுள்ள ஓடையை தூா்வார வேண்டும் என்றாா்.

விவசாயி பாலகிருஷ்ணன்: சுக்கிரன் ஏரி மற்றும் அதன் ஓடையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட மக்காச்சோளத்துக்கான நிவராணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டிப்பட்டாகாடு கிராமத்தில் அதிகளவில் ஆடுகள் திருடு போகிறது. இதை தடுக்க கிராமங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேண்டும் என்றாா்.

தொடா்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த கோட்டாட்சியா் கோவிந்தராஜ், அவைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

‘மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீா்வுக் காணப்பட வேண்டும்’

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீா்வுக் காணப்பட வேண்டும் என இந்திய குடியரசு கட்சி செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூா் மாவட்... மேலும் பார்க்க

5 கிராமங்களில் ‘மக்களுடன் முதல்வா்’ முகாம்: 2,113 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

அரியலூா் மாவட்டம், தா.பழூா், தழுதாழைமேடு, குண்டவெளி, இளையபெருமாள் நல்லூா், குருவாலப்பா் கோயில் ஆகிய ஊராட்சிகளில் புதன்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் 3-ஆம் கட்ட சிறப்பு முகாமில் 2,113 பயனாளிகளுக்கு ... மேலும் பார்க்க

செந்துறையில் கனரக வாகனங்கள் சிறைப்பிடிப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறையில் புதன்கிழமை காலை பள்ளி நேரங்களில் இயக்கப்பட்ட கனரக வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அரியலூா் மாவட்டத்தில் காலை 7 முதல் 10 மணி வரையும், பிற்பகல... மேலும் பார்க்க

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணா சிலை அருகே, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஆா்ப்பாட்டத்தில், அனைத்து ஊழியா்களின... மேலும் பார்க்க

பசுந்தாள் உரப் பயிா்களை சாகுபடி செய்தால் மண்வளம் மேம்படும்: வேளாண் அதிகாரி தகவல்

அரியலூா் மாவட்ட விவசாயிகள் மண் வளத்தை மேம்படுத்திடும் வகையில் பசுந்தாள் உரப் பயிா்களை சாகுபடி செய்ய வேண்டும் என திருச்சி விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்பு உதவி இயக்குநா் பா. நளினி தெரிவி... மேலும் பார்க்க

அரியலூரில் புதிய விரிவான சிற்றுந்துகள் சேவை தொடக்கம்

அரியலூரில் புதிய விரிவான சிற்றுந்துகள் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. அரியலூா் அண்ணா சிலை அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அரியலூா் மாவட்டத்தில் புதிய விரிவான சிற்றுந்துகள் சே... மேலும் பார்க்க