ரஷிய தாக்குதல்: உக்ரைனில் 28 பேர் உயிரிழப்பு
உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த 5 மாடி கட்டடத்தில் (படம்) இருந்து மேலும் சில உடல்கள் புதன்கிழமை மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துள்ளது.
அந்தக் கட்டடத்தில் ரஷியாவின் ஏவுகணை நேரடியாக பாய்ந்து வெடித்ததாகவும், கட்டட இடிபாடுகளில் இருந்து இதுவரை 23 உடல்கள் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். இது தவிர, ரஷியா நடத்திய தாக்குதலில் நகரின் பிற பகுதிகளில் மேலும் 5 போ் உயிரிழந்ததாக அவா்கள் கூறினா்.
இந்த ஆண்டு கீவ் நகரில் ரஷியா நடத்திய மிக மோசமான தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.