செய்திகள் :

`வேதபாராயணம், திருமுறை.. தமிழில் திருச்செந்தூர் குடமுழுக்கு' - திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு

post image

தமிழ்கடவுள், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமுமான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது.

யாகசாலை பூஜைகள் வரும் ஜூலை 1-ல் தொடங்க உள்ளது. குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழில் வேதங்கள் ஓத வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன.

திருச்செந்தூர்

அரசியல் தலைவர்கள், பக்தர்கள் என பல்வேறு தரப்பிலும் இந்த கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் ஜூலை மாதம் 7-ம் தேதி காலை 6.15 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில், இதில் வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதசுர இன்னிசை ஆகியவை நடைபெறும் எனவும், பன்னிரு திருமுறைகள் திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதல் நிகழ்வு நடைபெறும்.

மேலும், வேள்விச்சாலை வழிபாடு நாட்களில், வேதபாராயணம் திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதசுவர இன்னிசை நடைபெறும். காலை 7 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை, 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு, பக்கவாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெறும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

மதுரை, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலிலும் நடைபெறவுள்ள கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், “பழநியில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதேபோல திருச்செந்தூரில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும். கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவித்து அர்ச்சகர் பெயர், அவரது கைபேசி எண்ணுடன் பலகைகள் அமைத்தது தி.மு.க ஆட்சியில்தான். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதே திராவிட மாடல்.” என்றார்.

சபரிமலை ஐயப்பன் கோயில்: ஆனி மாத பூஜை, கொட்டும் மழையில் பக்தர்கள் தரிசனம்! | Photo Album

சபரிமலை ஐயப்பன் கோயில், ஆனி மாத பூஜை.சபரிமலை ஐயப்பன் கோயில், ஆனி மாத பூஜை.சபரிமலை ஐயப்பன் கோயில், ஆனி மாத பூஜை.சபரிமலை ஐயப்பன் கோயில், ஆனி மாத பூஜை.சபரிமலை ஐயப்பன் கோயில், ஆனி மாத பூஜை.சபரிமலை ஐயப்பன்... மேலும் பார்க்க

வேலூர்: 92 அடி உயர தீர்த்தகிரி முருகனுக்கு மகா கும்பாபிஷேகம் - மலை மீது அதிர்ந்த `அரோகரா’ முழக்கம்

வேலூர் சத்துவாச்சாரிக்கு அருகிலுள்ள புதுவசூர் மலைமீது அமைந்திருக்கிறது ஸ்ரீ தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். குன்றின் அடிவாரத்தில் சுபஸ்ரீ விநாயகர் அருள்பாலிக்கிறார். அவரை தரிசிக்க... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில் 275 ஆண்டுக்குப் பின் இன்று மஹா கும்பாபிஷேகம்!

பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசாமி திருக்கோயில் திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில் மூலவர் அனந்த சயனத்தில் 18 அடி நீளத்தில் காட்சி அருளுகிறார். 12008 சாளக... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு `மகா கும்பாபிஷேகம்' - அறிவிப்பு!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ள... மேலும் பார்க்க

275 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் காணும் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசாமி கோயில் ரகசியங்கள்!

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி திருக்கோயிலில் 275 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இந்தத் தருணத்தில் அக்கோயிலின் சிறப்புகளையும் வரலாற்று மர்மங்களையும் பேசுகிறது இந்த வீடியோ. மேலும் பார்க்க