செய்திகள் :

திருச்செந்தூர்: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு `மகா கும்பாபிஷேகம்' - அறிவிப்பு!

post image

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. இதில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நேரத்தை முடிவு செய்வதில் கோயில் நிர்வாகம் மற்றம் கோயில் விதாயகர்த்தா இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இந்தப் பிரச்னையில் கும்பாபிஷேக நடத்தும் நேரத்தை முடிவு செய்வதற்கு  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கும் தொடரப்பட்டது.

திருக்கோயில் ராஜகோபுரம்

கும்பாபிஷேகம் நடத்தும் நேரத்தை முடிவு செய்வதில் இந்துசமய அறநிலையத்துறை வல்லுநர் குழு முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 7ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கும் நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 இதுகுறித்து கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், "திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி  கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் குடமுழுக்கு விழா, வரும் ஜூலை 1-ம் தேதி முதல் 7-ம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. அதில் முக்கிய நிகழ்ச்சியான திருக்குட நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி காலை 6:15 மணி முதல் 6:50 மணிக்குள் நடத்தப்படும். ஜூலை 1-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது" எனக் கூறப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோயில்

யாகசாலை பூஜைக்காக ராஜகோபுரம் அருகில் 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் யாக சாலை மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 76 யாக குண்டங்கள் வைக்கப்பட்டு 12 கால யாகசாலை பூஜைகள் நடக்க உள்ளது. யாகசாலை பூஜைகளை பக்தர்கள் தரிசனம் செய்திடும் 2 ஆயிரம் சதுர அடியில் இடமும் அமைக்கப்பட்டுள்ளது.

275 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் காணும் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசாமி கோயில் ரகசியங்கள்!

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி திருக்கோயிலில் 275 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இந்தத் தருணத்தில் அக்கோயிலின் சிறப்புகளையும் வரலாற்று மர்மங்களையும் பேசுகிறது இந்த வீடியோ. மேலும் பார்க்க

`மலர்ச்சி பெற மறைமலைநகருக்கு வாங்க' திருவிளக்கு பூஜை ஸ்பெஷல்

2025 ஜூன் -13-ம் தேதி மறைமலைநகர் ஸ்ரீசெல்வ முத்துக்குமார சுவாமி கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அதுகுறித்த விவரங்... மேலும் பார்க்க

ஸ்ரீவைகுண்டம்: 108 திவ்ய தேசம், நவதிருப்பதிகளில் சூரியன் தலமான கள்ளபிரான் திருக்கோயில்| Photo Album

108 திவ்ய தேசங்கள்.! நவ திருப்பதி.! சிறப்பு பெற்ற ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் திருக்கோயில்.! மேலும் பார்க்க

விருதுநகர்: `100 கிடாய்கள், 150 சேவல்கள்… சுடச்சுட பறிமாறப்பட்ட அசைவ விருந்து’ - படையெடுத்த ஆண்கள்

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ளது மறையூர். இங்குள்ள பனந்தோட்டத்தில் மாசாணம் சுவாமி கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் இக்கோயில் திருவிழா நடைபெறும். திருவிழாவிலும், திருவிழாவை முன்னி... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: பனங்கிழங்கின் பீலியை நீக்கிவிட்டு உண்ணும் தெய்வானை; ஆச்சரியத்தில் பக்தர்கள்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேச... மேலும் பார்க்க

நிகும்பலா ஹோமம்: எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கும் அமாவாசை நள்ளிரவு வழிபாடு; சங்கல்பியுங்கள்!

நிகும்பலா ஹோமம்: எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கும் அமாவாசை நள்ளிரவு வழிபாடு! சங்கல்பியுங்கள்! 24-6-2025 - நிகும்பலா ஹோமம் உக்கிரம் பெற பெற இந்த காளியின் திருமுகம் சிவந்து உக்கிரமாவதை இப்போதும் கா... மேலும் பார்க்க