`மலர்ச்சி பெற மறைமலைநகருக்கு வாங்க' திருவிளக்கு பூஜை ஸ்பெஷல்
2025 ஜூன் -13-ம் தேதி மறைமலைநகர் ஸ்ரீசெல்வ முத்துக்குமார சுவாமி கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அதுகுறித்த விவரங்கள் உங்களுக்காக...
முன்பதிவுக்கு: 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

சென்னையின் புறநகர்ப் பகுதியாகவும் தொழிற்சாலைகள் நிரம்பிய இடமாகவும் உள்ளது மறைமலைநகர். முழுக்க முழுக்க முந்திரி தோப்பாக இருந்த இந்த இடத்தில் பல்வேறு சிறப்பான ஆலயங்கள் பல்லவர் காலம்தொட்டே இருந்து வந்துள்ளன. அதில் சிறப்பானது ஸ்ரீசெல்வ முத்துக்குமார சுவாமி திருக்கோயில். தொழில்-வியாபார விருத்தி தரும் பரிகாரத் தலமாகவே இது விளங்கி வருகிறது. இந்த கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழா பிரசித்தி பெற்றது. மேலும் இங்குள்ள ஸ்ரீசக்தி ஐயப்பனின் மண்டல பூஜை விழாவும் சிறப்பானது.

எண்ணியவற்றை விரைவிலேயே நிறைவேற்றும் இந்த இந்த சிறப்பான ஆலயத்தில் உங்கள் சக்தி விகடன் 2025 ஜூன் -13-ம் தேதி மாலை 6 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடத்த இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். கலியுக வள்ளலான ஸ்ரீசெல்வ முத்துக்குமார சுவாமியின் அருளால் வளமும் நலமும் பெற்றவர்கள் அநேகம். எனவே உலக நன்மைக்காகவும் தனிப்பட்ட துயர் நீங்கவும் பிரார்த்தனை செய்ய உகந்த வழிபாடு திருவிளக்கு வழிபாடு. அந்த அற்புதமான வழிபாட்டில் கலந்துகொள்ள வாசகிகளான உங்களையும் அழைக்கிறோம்.
முன்பதிவுக்கு: 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!
கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:
விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.
அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.
முன்பதிவுக்கு: 044-66802980/07