செய்திகள் :

`மலர்ச்சி பெற மறைமலைநகருக்கு வாங்க' திருவிளக்கு பூஜை ஸ்பெஷல்

post image

2025 ஜூன் -13-ம் தேதி மறைமலைநகர் ஸ்ரீசெல்வ முத்துக்குமார சுவாமி கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அதுகுறித்த விவரங்கள் உங்களுக்காக...

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

விளக்கு பூஜை

சென்னையின் புறநகர்ப் பகுதியாகவும் தொழிற்சாலைகள் நிரம்பிய இடமாகவும் உள்ளது மறைமலைநகர். முழுக்க முழுக்க முந்திரி தோப்பாக இருந்த இந்த இடத்தில் பல்வேறு சிறப்பான ஆலயங்கள் பல்லவர் காலம்தொட்டே இருந்து வந்துள்ளன. அதில் சிறப்பானது ஸ்ரீசெல்வ முத்துக்குமார சுவாமி திருக்கோயில். தொழில்-வியாபார விருத்தி தரும் பரிகாரத் தலமாகவே இது விளங்கி வருகிறது. இந்த கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழா பிரசித்தி பெற்றது. மேலும் இங்குள்ள ஸ்ரீசக்தி ஐயப்பனின் மண்டல பூஜை விழாவும் சிறப்பானது.

ஸ்ரீசெல்வ முத்துக்குமார சுவாமி

எண்ணியவற்றை விரைவிலேயே நிறைவேற்றும் இந்த இந்த சிறப்பான ஆலயத்தில் உங்கள் சக்தி விகடன் 2025 ஜூன் -13-ம் தேதி மாலை 6 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடத்த இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். கலியுக வள்ளலான ஸ்ரீசெல்வ முத்துக்குமார சுவாமியின் அருளால் வளமும் நலமும் பெற்றவர்கள் அநேகம். எனவே உலக நன்மைக்காகவும் தனிப்பட்ட துயர் நீங்கவும் பிரார்த்தனை செய்ய உகந்த வழிபாடு திருவிளக்கு வழிபாடு. அந்த அற்புதமான வழிபாட்டில் கலந்துகொள்ள வாசகிகளான உங்களையும் அழைக்கிறோம்.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:

விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.

அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

விளக்குப் பூஜை

இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

ஸ்ரீவைகுண்டம்: 108 திவ்ய தேசம், நவதிருப்பதிகளில் சூரியன் தலமான கள்ளபிரான் திருக்கோயில்| Photo Album

108 திவ்ய தேசங்கள்.! நவ திருப்பதி.! சிறப்பு பெற்ற ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் திருக்கோயில்.! மேலும் பார்க்க

விருதுநகர்: `100 கிடாய்கள், 150 சேவல்கள்… சுடச்சுட பறிமாறப்பட்ட அசைவ விருந்து’ - படையெடுத்த ஆண்கள்

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ளது மறையூர். இங்குள்ள பனந்தோட்டத்தில் மாசாணம் சுவாமி கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் இக்கோயில் திருவிழா நடைபெறும். திருவிழாவிலும், திருவிழாவை முன்னி... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: பனங்கிழங்கின் பீலியை நீக்கிவிட்டு உண்ணும் தெய்வானை; ஆச்சரியத்தில் பக்தர்கள்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேச... மேலும் பார்க்க

நிகும்பலா ஹோமம்: எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கும் அமாவாசை நள்ளிரவு வழிபாடு; சங்கல்பியுங்கள்!

நிகும்பலா ஹோமம்: எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கும் அமாவாசை நள்ளிரவு வழிபாடு! சங்கல்பியுங்கள்! 24-6-2025 - நிகும்பலா ஹோமம் உக்கிரம் பெற பெற இந்த காளியின் திருமுகம் சிவந்து உக்கிரமாவதை இப்போதும் கா... மேலும் பார்க்க

இமயமலை: `வெற்றி வேல் வீரவேல் முழக்கம்' உத்தரகாண்ட் காத்திக் ஸ்வாமி கோயிலில் பக்தர்கள் |Photo Album

காத்திக் ஸ்வாமி கோவில் உத்தரகாண்ட்காத்திக் ஸ்வாமி கோவில் உத்தரகாண்ட்காத்திக் ஸ்வாமி கோவில் உத்தரகாண்ட்காத்திக் ஸ்வாமி கோவில் உத்தரகாண்ட்காத்திக் ஸ்வாமி கோவில் உத்தரகாண்ட்காத்திக் ஸ்வாமி கோவில் உத்தரகா... மேலும் பார்க்க

மஹாமிருத்யுஞ்சய ஹோமம்: இந்த ஹோமத்தில் ஏன் கலந்து கொள்ள வேண்டும்? மார்க்கண்டேயர் சொல்லும் காரணங்கள்

மஹாமிருத்யுஞ்சய ஹோமம்: இந்த ஹோமத்தில் ஏன் கலந்து கொள்ள வேண்டும்! மார்க்கண்டேயர் சொல்லும் காரணங்கள்! இந்த ஹோமம் அகால மரணத்தைத் தடுக்கும்; விபத்துக்களில் இருந்து காக்கும்; எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடி... மேலும் பார்க்க