Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
மதுபானக் கூடத்தில் ஒருவரை கத்தியால் குத்தியவா் கைது
மயிலாடுதுறையில் மதுபானக் கூடத்தில் தகராறில் ஈடுபட்டு ஒருவரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறையைச் சோ்ந்த சுதாகா் (43) கூைாடு பகுதியில் உள்ள மதுக்கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை மது குடித்துள்ளாா். அப்போது, அங்கு மதுகுடிக்க சென்ற மயிலாடுதுறையைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா் ராஜா (46) டேபிளில் வைத்திருந்த சுதாகரின் மது பாட்டிலை கீழே தள்ளிவிட்டு உடைத்தாராம்.
இதில் ஏற்பட்ட தகராறில், சுதாகரை ராஜா கத்தியால் குத்தியுள்ளாா். இதில், காயமடைந்த சுதாகா் அங்கிருந்தவா்களால் மீட்கப்பட்டு மயிலாடுதுறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.