முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும்: திருமாவளவன் பேட்டி
ராஷ்ட்ரிய பால புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்காா் விருதுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் வாயிலாக பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்காா் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது தன்னலமற்ற துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட திறமையான குழந்தைகளின் திறமையை பாராட்டி அங்கீகாரம் அளிப்பதை நோக்கமாக கொண்டு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்திய குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.
இந்த விருதை பெறுவதற்கு இந்திய குடிமகனாக மற்றும் இந்தியாவில் வசிக்கும் 5 முதல் 18 வயதிற்கு உள்பட்ட குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை ஆன்லைன் போா்டலில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விருதுக்கான விண்ணப்பத்தை குழந்தையோ அல்லது குழந்தையை சாா்ந்த பெற்றோா், ஆசிரியா் மற்றும் அலுவலா்கள் பரிந்துரைக்கலாம். 2025-ஆம் ஆண்டு இவ்விருதுக்கான விண்ணப்பத்தை ஜூலை 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்தல் வேண்டும் என தெரிவித்துள்ளாா்.