செய்திகள் :

சென்னை: 'தடாவில் தொடங்கிய 'வடை' தகராறு' - மயிலாப்பூரில் நடந்த கொலை முயற்சி; என்ன நடந்தது?

post image

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வரும் நண்பர்களான 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடந்த 04.05.2025 அன்று இரவு வீட்டினருகே பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த மைத்ரேயன் என்பவர் உட்பட 3 நபர்கள் சிறுவர்களிடம் வம்பு இழுத்திருக்கிறார்கள்.

அப்போது நடந்த வாக்குவாதத்தில் சிறுவர்களை மைத்ரேயன் தரப்பு தகாத வார்த்தைகளால் பேசியதோடு கத்திகளால் சிறுவர்களைக் குத்திவிட்டுத் தப்பிச் சென்றது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு சிறுவர்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக மயிலாப்பூர் போலீஸார், விசாரணை நடத்தி கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

மைத்ரேயன்
மைத்ரேயன்

பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் மயிலாப்பூரைச் சேர்ந்த மைத்ரேயன் (19), அவரின் கூட்டாளி கவியரசு (26) ஆகிய இருவரைக் கைது செய்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் கவியரசுக்கும் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவத்தில் 17 வயது சிறுவன் ஒருவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவர்களிடமிருந்து 2 கத்திகளை போலீஸார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். விசாரணையில் மைத்ரேயன் மீது ஒரு குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து மயிலாப்பூர் போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட மைத்ரேயன், கவியரசு மற்றும் காயமடைந்த சிறுவர்கள் என அனைவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் அனைவரும் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். கடந்த மாதம் இவர்கள் அனைவரும் ஆந்திரா தடாவுக்கு பைக்கில் சென்றிருக்கிறார்கள்.

அங்குள்ள அருவியில் உற்சாகமாகக் குளியல் போட்டவர்கள் மதுவும் அருந்திவிட்டு சென்னைக்குத் திரும்பியிருக்கிறார்கள். வரும் வழியில் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டிருக்கிறார்கள்.

Murder
Murder

அப்போது மைத்ரேயன், எச்சில் கையில் வடை ஒன்றை எடுத்திருக்கிறார். அதை ஹோட்டல் ஊழியர் கண்டித்திருக்கிறார். இதனால் ஹோட்டல் ஊழியர்களுடன் மைத்ரேயன் சண்டைபோட்டிருக்கிறார்.

அதைக் காயமடைந்த சிறுவர்கள் தடுத்ததோடு சமரசப்படுத்தியிருக்கிறார்கள். அதனால் மைத்ரேயனுக்கும் சிறுவர்களுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த கொலை முயற்சி சம்பவம் நடந்திருக்கிறது" என்றனர். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

சென்னை: லவ் டார்ச்சர்; இளம்பெண் வீட்டில் ரகளை - இளைஞரை கைது செய்த போலீஸ்!

சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அந்தப் பெண்ணின் மூத்த மகளை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கோகுல்குமார் என்ற இளைஞர் காதலித்து வந்திருக்கிறார். அதற்... மேலும் பார்க்க

பீகாருக்கு மாற்றி அனுப்பப்பட்ட திருத்தணி தொழிலாளரின் சடலம்; மருத்துவர் இடமாற்றம்; பின்னணி என்ன?

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா அருகிலுள்ள பி. ஆர். பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). கூலித் தொழிலாளரான இவர், குடும்பத் தகராறில் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.அதனால் ராஜேந்திரனை அவர... மேலும் பார்க்க

அடுத்தடுத்து மோசடி புகார்; வழக்குபதிவு - சிக்கலில் அதிமுக நிர்வாகி, தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார்?

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார். இவரின் மாமியார் சரஸ்வதி மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். அசோக் குமாரும் ஆரம்பத்தில் பாஜகவில் இருந்த நிலையில், பிறகு அதிமுகவி... மேலும் பார்க்க

லக்கி பாஸ்கர் பாணியில் மோசடி; வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருடி பங்குச்சந்தை முதலீடு; பின்னணி என்ன?

ராஜஸ்தான், கோடாவில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் மக்கள் தொடர்பு மேலாளராக இருந்தவர் சாக்‌ஷி குப்தா. இந்த வங்கியில் பணம் டெபாசிட் செய்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு வந்தார... மேலும் பார்க்க

"ஆள்மாறாட்டம் செய்து ரூ.7.50 லட்சம் மோசடி" - வெளிநாட்டில் கணவரை இழந்த பெண் ஆட்சியரிடம் புகார்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது: 53). இவர், ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலுள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனம் வாயிலாக, கனடா சென்றிருந்த நிலையில... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: 'மதுபோதையில் தகராறு; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்!' - 7 பேரை கைது செய்த போலீஸ்

புதுக்கோட்டை போஸ் நகர், எட்டாம் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது: 23) இவருக்கும், காந்திநகர் இரண்டாம் வீதி பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது,... மேலும் பார்க்க