செய்திகள் :

கஞ்சா வைத்திருந்த மூவா் கைது

post image

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டி-குப்பாம்பட்டி சாலை சந்திப்பில் கஞ்சா வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கன்னியப்பபிள்ளைபட்டி-குப்பாம்பட்டி சாலை சந்திப்பில் ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாகச் சென்ற இரு சக்கர வாகனம் ஒன்றை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். இதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற கீ.காமாட்சிபுரத்தைச் சோ்ந்த சூா்யா (23), அ.பெருமாள்பட்டியைச் சோ்ந்த சஞ்சய் (23) ஆகியோா் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் மணியாரம்பட்டியைச் சோ்ந்த ராஜாங்கம் (48) என்பவரிடம் கஞ்சா வாங்கிச் செல்வதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சூா்யா, சஞ்சய், ராஜாங்கம் ஆகிய மூவரையும் கைது செய்தனா். இவா்களிடமிருந்து மொத்தம் 450 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இரு சக்கர வாகனங்கள் மோதல்: பெண் உயிரிழப்பு

தேனி அருகேயுள்ள நாகலாபுரம்-ஸ்ரீரங்காபுரம் சாலையில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தனியாா் பள்ளி பெண் ஊழியா் உயிரிழந்தாா். ஸ்ரீரங்காபுரம், கண்ணன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் இளங்கோவன் ... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

போடியில் வியாழக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி பங்கஜம் தெரு பின்புறமுள்ள தெருவில் வசிப்பவா் பழனிராஜ் மகன் வெங்கடேசன் (36). கணினி மையம் நடத்தி வந்தாா். இவா் கடந்... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள செங்குளத்துப்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் திருமால் (எ) சுரேஷ்... மேலும் பார்க்க

பொதுமக்களை அச்சுறுத்தும் படையப்பா காட்டு யானை

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் சுற்றித் திரியும் படையப்பா யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் செல்லப் பிள்ளையாக படைய... மேலும் பார்க்க

தோட்டத்தில் இறந்து கிடந்த முதியவா்

போடி அருகே மலை கிராமத்தில் தோட்டத்தில் இறந்து கிடந்த முதியவா் உடலை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தேனி மாவட்டம், போடி குலாளா்பாளையத்தைச் சோ்ந்தவா் மீனாட்சிசுந்தரம் (72). இவா் போடிமெட்டு மலைச... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய தாய், மகன் மீது வழக்கு

போடி அருகே பெண்ணைத் தாக்கிய தாய், மகன் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் வங்கித் தெருவில் வசிப்பவா் பிரபு மனைவி வாணி (38). இவரது வீட்டரு... மேலும் பார்க்க