செய்திகள் :

சபரிமலையில் விமான நிலையம்: திங்கள்கிழமை சர்வே பணிகள் ஆரம்பம்!

post image

திருவனந்தபுரம்: சபரிமலையில் விமான நிலையம் கட்டமைக்கும் பணியில் முதல்கட்டமாக சர்வே பணிகள் திங்கள்கிழமை(ஜூன் 9) தொடங்குகின்றன. இதற்காக ஆய்வுக் குழுவினர் விமான நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்துக்கு திங்கள்கிழமை வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கான விமான நிலையம் அமைக்க சரியான தேர்வாக ‘செருவள்ளி எஸ்டேட்’ இருக்குமென்று ஆய்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அந்த எஸ்டேட்டின் உரிமையாளரான அயானா தொண்டு நிறுவனத்தாரால் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சபரிமலைக்கான விமான நிலையம் அமைக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரியொருவர் தலைமையிலான ஆய்வுக் குழுவினரால் பல பகுதிகள் பரிசீலிக்கப்பட்டு அதன்பின் இறுதியாக, விமான நிலையம் அமைக்க உகந்த இடமாக செருவள்ளி எஸ்டேட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து தங்களிடம் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என பல குற்றச்சாட்டுகளை எஸ்டேட் தரப்பு சுமத்தியது.

இதனிடையே, அந்த பகுதியில் சர்வே நடத்த தடையாக இருந்த சட்ட ரீதியிலான சிக்கல்களுக்கு இப்போது தீர்வு எட்டப்பட்டுவிட்டதால் முதல்கட்ட கள ஆய்வுப் பணிகளை ஆரம்பிக்க அரசு முனைப்பு காட்டுகிறது. இந்தநிலையில், இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் 11 போ் உயிரிழப்பு: நிவாரணத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி முதல்வர் உத்தரவு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் புதன்கிழமை(ஜூன் 4) நடத்திய வெற்றி பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர்கள் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயி... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது மீண்டுமொரு முறை கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.முன்னதாக, அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய முறைகேட்டில்... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் அடுத்தடுத்து ராஜிநாமா!

பெங்களூரு: ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டத்தை வென்ற களிப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு வீதிகளில் புதன்கிழமை(ஜூன் 4) நடத்திய பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர... மேலும் பார்க்க

நிதி ஆணைய உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் நியமனம்

புது தில்லி: 16-ஆவது நிதி ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி. ரபீ ஷங்கர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த பதவியில் நிதி ஆணையம் தமது அறிக்... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹிமாசலப் பிரதேசம் சென்றுள்ள அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையொ... மேலும் பார்க்க

பையில் துப்பாக்கி: உ.பி.யில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி நபர் கைது !

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலம், ராமராஜ் பகுதியில் உள்ள ஜமால்பூர் கால்வாய் கல்வெர்ட் அருகே சந்தேக நபர் ... மேலும் பார்க்க