செய்திகள் :

பையில் துப்பாக்கி: உ.பி.யில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி நபர் கைது !

post image

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம், ராமராஜ் பகுதியில் உள்ள ஜமால்பூர் கால்வாய் கல்வெர்ட் அருகே சந்தேக நபர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றபோது, ​​அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

சோதனையில், அதிகாரிகள் ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களைக் கண்டுபிடித்தனர். உடனே அந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

கைதான நபர் ஹரியாணாவின் பிரபலமான உணவு டெலிவரி செயலியின் முகவராகப் பணியாற்றி வந்துள்ளார்.

முசாபர்நகர் மூத்த காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் வர்மா கூறுகையில், சுதான்ஷு குமார் என அடையாளம் காணப்பட்ட நபர், தில்லி, ஹரியாணா, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு சட்டவிரோத துப்பாக்கிகளை கடத்த தனது டெலிவரி முகவர் வேலையை பயன்படுத்தி வந்துள்ளார்.

பக்ரீத் அன்றும் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 34 பேர் பலி!

அவருக்கு குற்றவியல் வரலாறு உள்ளது, மேலும் அவர் மீது ஐந்து குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.

விசாரணையின் போது, ​​சட்டவிரோத ஆயுத கடத்ததில் மேலும் ஆறு பேருக்கு தொடர்பு இருப்பதாக சுதான்ஷு தெரிவித்தார். இந்த சந்தேக நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய போலீஸார் ஒரு சிறப்புப் படையை அமைத்துள்ளனர்.

இந்தக் கும்பல் பல்வேறு பகுதிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. ஆயுதச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

பெங்களூரில் 11 போ் உயிரிழப்பு: நிவாரணத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி முதல்வர் உத்தரவு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் புதன்கிழமை(ஜூன் 4) நடத்திய வெற்றி பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர்கள் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயி... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது மீண்டுமொரு முறை கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.முன்னதாக, அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய முறைகேட்டில்... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் அடுத்தடுத்து ராஜிநாமா!

பெங்களூரு: ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டத்தை வென்ற களிப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு வீதிகளில் புதன்கிழமை(ஜூன் 4) நடத்திய பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர... மேலும் பார்க்க

நிதி ஆணைய உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் நியமனம்

புது தில்லி: 16-ஆவது நிதி ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி. ரபீ ஷங்கர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த பதவியில் நிதி ஆணையம் தமது அறிக்... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹிமாசலப் பிரதேசம் சென்றுள்ள அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையொ... மேலும் பார்க்க

சபரிமலையில் விமான நிலையம்: திங்கள்கிழமை சர்வே பணிகள் ஆரம்பம்!

திருவனந்தபுரம்: சபரிமலையில் விமான நிலையம் கட்டமைக்கும் பணியில் முதல்கட்டமாக சர்வே பணிகள் திங்கள்கிழமை(ஜூன் 9) தொடங்குகின்றன. இதற்காக ஆய்வுக் குழுவினர் விமான நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்... மேலும் பார்க்க