செய்திகள் :

சத்தீஸ்கரில் 2 பெண்கள் உள்பட 5 நக்சல்கள் சுட்டுக் கொலை!

post image

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த இரண்டு என்கவுன்டர்களில் 5 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

சமீபத்திய உயிரிழப்புகளுடன், முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்களான சுதாகர், பாஸ்கர் உட்பட ஏழு நக்சலைட்டுகள் கடந்த மூன்று நாள்களில் கொல்லப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தின் இந்திராவதி தேசிய பூங்கா பகுதியில் நடந்து வரும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது ஏழு நக்சல்களின் உடல்களைப் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாவோயிஸ்ட் தலைவர் சுதாகர், தெலங்கானா மாநிலக் குழு உறுப்பினர் பண்டி பிரகாஷ், தண்டகாரண்யா சிறப்பு மண்டலக் குழு உறுப்பினர் பப்பா ராவ் மற்றும் சில நக்சல்கள் இருப்பது குறித்த தகவல்களின் அடிப்படையில், மாநில காவல்துறையின் சிறப்புப் பணிப் படை மற்றும் மாவட்ட ரிசர்வ் காவல்படை, சிஆர்பிஎஃப்-யின் சிறப்புப் பிரிவான கோப்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த நடவடிக்கை ஜூன் 4ஆம் தேதி தொடங்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

கொல்லப்பட்ட ஐந்து நக்சலைட்டுகளின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை, அவர்களில் இரண்டு பெண்கள் ஆவார். இந்த நடவடிக்கையில் இரண்டு ஏகே-47 துப்பாக்கிகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது.

மேலும், இந்த நடவடிக்கையின்போது பாம்பு கடி, தேனீ கொட்டுதல், நீரிழப்பு மற்றும் பிற காரணங்களால் பாதுகாப்புப் பணியாளர்கள் சிலர் காயமடைந்துள்ளனர், மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டதாக அதிகாரி கூறினார்.

தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது மீண்டுமொரு முறை கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.முன்னதாக, அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய முறைகேட்டில்... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் அடுத்தடுத்து ராஜிநாமா!

பெங்களூரு: ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டத்தை வென்ற களிப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு வீதிகளில் புதன்கிழமை(ஜூன் 4) நடத்திய பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர... மேலும் பார்க்க

நிதி ஆணைய உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் நியமனம்

புது தில்லி: 16-ஆவது நிதி ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி. ரபீ ஷங்கர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த பதவியில் நிதி ஆணையம் தமது அறிக்... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹிமாசலப் பிரதேசம் சென்றுள்ள அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையொ... மேலும் பார்க்க

பையில் துப்பாக்கி: உ.பி.யில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி நபர் கைது !

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலம், ராமராஜ் பகுதியில் உள்ள ஜமால்பூர் கால்வாய் கல்வெர்ட் அருகே சந்தேக நபர் ... மேலும் பார்க்க

சபரிமலையில் விமான நிலையம்: திங்கள்கிழமை சர்வே பணிகள் ஆரம்பம்!

திருவனந்தபுரம்: சபரிமலையில் விமான நிலையம் கட்டமைக்கும் பணியில் முதல்கட்டமாக சர்வே பணிகள் திங்கள்கிழமை(ஜூன் 9) தொடங்குகின்றன. இதற்காக ஆய்வுக் குழுவினர் விமான நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்... மேலும் பார்க்க