செய்திகள் :

சென்னை: அரசு வேலைக்குப் போலி நியமன ஆர்டர்; 12 பேரிடம் ரூ.1,66,36,000 மோசடி செய்த கும்பல் கைது

post image

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரதி (27). இவர் அரசு வேலை தேடிக் கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் சென்னை தி.நகரைச் சேர்ந்த மோகன்ராஜன், அவரின் கூட்டாளியான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோரின் அறிமுகம் பாரதிக்குக் கிடைத்திருக்கிறது.

அப்போது மோகன்ராஜனும் ராதாகிருஷ்ணனும் தாங்கள் இருவரும் தலைமைச் செயலகத்தில் உயரதிகாரிகளாக வேலை செய்து கொண்டிருப்பதாக பாரதியிடம் கூறியிருக்கிறார்கள்.

அதை உண்மை என நம்பிய பாரதியும் தன்னுடைய கனவான அரசு வேலை குறித்து இருவரிடமும் கேட்டிருக்கிறார். அதற்கு மோகன்ராஜனும் ராதாகிருஷ்ணனும் 'உதவி மக்கள் தொடர்பு அலுவலர்' வேலையை வாங்கித் தருவதாக உறுதியளித்திருக்கிறார்கள்.

பின்னர் அதற்குச் சில லட்சம் ரூபாய் செலவாகும். அந்தப் பணத்தைக் கொடுத்தால் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் போஸ்டிங் வாங்கித் தருவதாக பாரதியிடம் மோகன்ராஜனும் ராதாகிருஷ்ணனும் ஆசைவார்த்தைகளைக் கூறியிருக்கிறார்கள்.

மோகன்ராஜன்
மோகன்ராஜன்

இதையடுத்து பாரதியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்ட மோகன்ராஜனும் ராதாகிருஷ்ணனும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வேலைக்கான நியமன ஆர்டரை பாரதியிடம் கொடுத்திருக்கிறார்கள்.

அதை வாங்கிய பாரதி, தலைமைச் செயலகத்தில் அந்த ஆர்டரை கொடுத்து வேலைக்குச் சேர சென்றபோதுதான், அது போலி எனத் தெரியவந்தது. அதனால் மோகன்ராஜன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களை ஏமாற்றியதை பாரதி உணர்ந்தார்.

பின்னர் இதுதொடர்பாக சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் ராதிகா மேற்பார்வையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் பாரதியைப் போல மேலும் 11 பேரிடம் அரசு வேலை, நீதித்துறையில் ஓஏ வேலை எனக் கூறி மொத்தம் 12 பேர்களிடம் 1,66,36,000 ரூபாயை மோகன்ராஜனும் ராதாகிருஷ்ணனும் வாங்கி ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

கிணற்றில் விழுந்த மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை பலி; தீவிர சிகிச்சையில் மகன்; என்ன நடந்தது?

திருவள்ளூர் அருகே மப்பேடு பகுதியை அடுத்த முதுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி (61). இவரின் மனைவி புவனேஸ்வரி.இந்தத் தம்பதியினருக்கு சந்தோஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர்கள் குடியிருக்கும் பகுதியில் குட... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: இலங்கைக்குக் கஞ்சா கடத்த முயற்சி; 70 கிலோ பறிமுதல்; காருடன் 6 பேர் கைது; பின்னணி என்ன?

தமிழக கடலோரப் பகுதிகள் வழியாக இலங்கைக்குப் போதைப் பொருட்கள், கஞ்சா, பீடி இலைகள் மற்றும் சமையல் பொருட்களான மஞ்சள், ஏலக்காய் உள்ளிட்டவைத் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன.கடந்த சில நாள்களுக்கு முன் இலங்... மேலும் பார்க்க

ஆம்பூர்: கோயில் தூய்மைப் பணிக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறல் - அர்ச்சகர் மீது வழக்கு பதிவு

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (40). இவர் அங்குள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான நாகநாதசுவாமி திருக்கோயிலில் அர்ச்சகராக இருக்கிறார். இந்த நிலையில், அர்ச்சகர் தியாகராஜன்... மேலும் பார்க்க

சம்பள பாக்கியை கேட்ட டிரைவரை கத்தியால் குத்திய பாலிவுட் இயக்குநர்? - மும்பை போலீஸ் விசாரணை

பாலிவுட்டில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் மணீஷ் குப்தா. இவரிடம் மொகமத் லஷ்கர் என்பவர் டிரைவராக இருந்தார். மூன்று ஆண்டுகள் டிரைவராக பணியாற்றி வந்த மொகமத்திற்கு இயக்குனர் மணீஷ் சரியான நேர... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: ஆன்லைன் ரம்மியில் பணம் இழப்பு; கண்டித்த கணவர் - கோபத்தில் மகளை கொன்று தாயும் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், பூவரசங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (28). இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீகா (24). இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தத... மேலும் பார்க்க

சென்னை: 'தடாவில் தொடங்கிய 'வடை' தகராறு' - மயிலாப்பூரில் நடந்த கொலை முயற்சி; என்ன நடந்தது?

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வரும் நண்பர்களான 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடந்த 04.05.2025 அன்று இரவு வீட்டினருகே பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த ... மேலும் பார்க்க