செய்திகள் :

ராமேஸ்வரம்: இலங்கைக்குக் கஞ்சா கடத்த முயற்சி; 70 கிலோ பறிமுதல்; காருடன் 6 பேர் கைது; பின்னணி என்ன?

post image

தமிழக கடலோரப் பகுதிகள் வழியாக இலங்கைக்குப் போதைப் பொருட்கள், கஞ்சா, பீடி இலைகள் மற்றும் சமையல் பொருட்களான மஞ்சள், ஏலக்காய் உள்ளிட்டவைத் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த சில நாள்களுக்கு முன் இலங்கைக்குக் கடத்துவதற்காக மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 175 கிலோ ஏலக்காயினை தங்கச்சிமடம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இலங்கையில் பிடிபட்ட கடத்தல் பீடி இலைகள்
இலங்கையில் பிடிபட்ட கடத்தல் பீடி இலைகள்

இதனைத் தொடர்ந்து தமிழக கடலோரப் பகுதியிலிருந்து இலங்கை மன்னார் மாவட்டம் நடுக்குடா கடற்கரைக்கு நேற்று கடத்திச் செல்லப்பட்ட 1250 கிலோ பீடி இலைகள் அங்குச் சிக்கின.

இது தொடர்பாக கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 4 பேரைக் கைது செய்த இலங்கை சுங்கத்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கைக்குக் கடத்துவதற்காக ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக துறைமுகம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடற்கரைப் பகுதியில் உள்ள எம்.ஆர்.டி மீன் கம்பெனி அருகில் சந்தேகப்படும் நிலையில் கார் ஒன்று நின்றுள்ளது. அந்த காரை போலீஸார் சோதனையிட்ட போது, காரினுள் கஞ்சா பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

கஞ்சா கடத்தி வர பயன்படுத்திய கார்
கஞ்சா கடத்தி வர பயன்படுத்திய கார்

காரில் இருந்த 70 கிலோ கஞ்சாவைக் கைபற்றிய போலீஸார், இது தொடர்பாக தங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளைச் சேர்ந்த சகாயராஜ், அர்த்தினாஸ், ராமச்சந்திரன், குலோத்தமன், சந்தோஷ், சச்சின் ஆகிய 6 பேரைக் கைது செய்து  காரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இலங்கைக்குக் கடத்த முயன்ற கஞ்சா குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

கிணற்றில் விழுந்த மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை பலி; தீவிர சிகிச்சையில் மகன்; என்ன நடந்தது?

திருவள்ளூர் அருகே மப்பேடு பகுதியை அடுத்த முதுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி (61). இவரின் மனைவி புவனேஸ்வரி.இந்தத் தம்பதியினருக்கு சந்தோஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர்கள் குடியிருக்கும் பகுதியில் குட... மேலும் பார்க்க

சென்னை: அரசு வேலைக்குப் போலி நியமன ஆர்டர்; 12 பேரிடம் ரூ.1,66,36,000 மோசடி செய்த கும்பல் கைது

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரதி (27). இவர் அரசு வேலை தேடிக் கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் சென்னை தி.நகரைச் சேர்ந்த மோகன்ராஜன், அவரின் கூட்டாளியான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்... மேலும் பார்க்க

ஆம்பூர்: கோயில் தூய்மைப் பணிக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறல் - அர்ச்சகர் மீது வழக்கு பதிவு

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (40). இவர் அங்குள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான நாகநாதசுவாமி திருக்கோயிலில் அர்ச்சகராக இருக்கிறார். இந்த நிலையில், அர்ச்சகர் தியாகராஜன்... மேலும் பார்க்க

சம்பள பாக்கியை கேட்ட டிரைவரை கத்தியால் குத்திய பாலிவுட் இயக்குநர்? - மும்பை போலீஸ் விசாரணை

பாலிவுட்டில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் மணீஷ் குப்தா. இவரிடம் மொகமத் லஷ்கர் என்பவர் டிரைவராக இருந்தார். மூன்று ஆண்டுகள் டிரைவராக பணியாற்றி வந்த மொகமத்திற்கு இயக்குனர் மணீஷ் சரியான நேர... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: ஆன்லைன் ரம்மியில் பணம் இழப்பு; கண்டித்த கணவர் - கோபத்தில் மகளை கொன்று தாயும் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், பூவரசங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (28). இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீகா (24). இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தத... மேலும் பார்க்க

சென்னை: 'தடாவில் தொடங்கிய 'வடை' தகராறு' - மயிலாப்பூரில் நடந்த கொலை முயற்சி; என்ன நடந்தது?

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வரும் நண்பர்களான 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடந்த 04.05.2025 அன்று இரவு வீட்டினருகே பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த ... மேலும் பார்க்க