செய்திகள் :

ஆம்பூர்: கோயில் தூய்மைப் பணிக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறல் - அர்ச்சகர் மீது வழக்கு பதிவு

post image

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (40). இவர் அங்குள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான நாகநாதசுவாமி திருக்கோயிலில் அர்ச்சகராக இருக்கிறார்.

இந்த நிலையில், அர்ச்சகர் தியாகராஜன் மீது திருமணமாகாத 28 வயது இளம்பெண், மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அதில், ``தியாகராஜன் அர்ச்சகராக உள்ள கோயிலில் நான் கடந்த ஓராண்டாக தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் உழவாரப் பணி செய்துவந்தேன். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் என்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி வலுகட்டாயமாக பாலியல் உறவில் ஈடுபட்டார். இப்போது திருமணம் செய்துகொள்ளாமல் மிரட்டல் விடுத்து ஏமாற்றிவருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.

இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸாருக்கு எஸ்.பி ஷ்ரேயா குப்தா உத்தரவிட்டார்.

அர்ச்சகர் தியாகராஜன்

அதன்படி, அர்ச்சகர் தியாகராஜன் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைது நடவடிக்கைக்குப் பயந்து அர்ச்சகர் தியாகராஜன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. பாலியல் புகாருக்குள்ளான தியாகராஜனுக்கு ஏற்கெனவே திருமணங்களாகி, 2 மனைவிகள் மற்றும் குழந்தைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மேற்கண்ட விவகாரம் தொடர்பாக அர்ச்சகர் தியாகராஜன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் கோயில் செயல் அலுவலர் விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பியிருக்கிறார்.

நற்பெயருக்கு களங்கம்

அந்த குறிப்பாணையில், ``நடந்த சம்பவம் இந்து சமய அறநிலையத்துறைக்கு அவப்பெயரையும், அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பக்த கோடிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் ஒரு அசிங்கத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், தாங்கள் நிரந்தர பணியாளராக இருக்கும்போது திருக்கோயில் பணியாளர்களுக்கான ஒழுக்கநெறிகளை கடைபிடிக்கவில்லை என்பதையே இது சுட்டி காட்டுகிறது. எனவே, தாங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது? என்பதற்கான விளக்கத்தினை இக்கடிதம் பெற்ற 3 நாள்களுக்குள் செயல் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக விளக்கத்துடன் நேரில் ஆஜராகி அறிக்கை சமர்பிக்க வேண்டும்’’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

கிணற்றில் விழுந்த மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை பலி; தீவிர சிகிச்சையில் மகன்; என்ன நடந்தது?

திருவள்ளூர் அருகே மப்பேடு பகுதியை அடுத்த முதுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி (61). இவரின் மனைவி புவனேஸ்வரி.இந்தத் தம்பதியினருக்கு சந்தோஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர்கள் குடியிருக்கும் பகுதியில் குட... மேலும் பார்க்க

சென்னை: அரசு வேலைக்குப் போலி நியமன ஆர்டர்; 12 பேரிடம் ரூ.1,66,36,000 மோசடி செய்த கும்பல் கைது

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரதி (27). இவர் அரசு வேலை தேடிக் கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் சென்னை தி.நகரைச் சேர்ந்த மோகன்ராஜன், அவரின் கூட்டாளியான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: இலங்கைக்குக் கஞ்சா கடத்த முயற்சி; 70 கிலோ பறிமுதல்; காருடன் 6 பேர் கைது; பின்னணி என்ன?

தமிழக கடலோரப் பகுதிகள் வழியாக இலங்கைக்குப் போதைப் பொருட்கள், கஞ்சா, பீடி இலைகள் மற்றும் சமையல் பொருட்களான மஞ்சள், ஏலக்காய் உள்ளிட்டவைத் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன.கடந்த சில நாள்களுக்கு முன் இலங்... மேலும் பார்க்க

சம்பள பாக்கியை கேட்ட டிரைவரை கத்தியால் குத்திய பாலிவுட் இயக்குநர்? - மும்பை போலீஸ் விசாரணை

பாலிவுட்டில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் மணீஷ் குப்தா. இவரிடம் மொகமத் லஷ்கர் என்பவர் டிரைவராக இருந்தார். மூன்று ஆண்டுகள் டிரைவராக பணியாற்றி வந்த மொகமத்திற்கு இயக்குனர் மணீஷ் சரியான நேர... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: ஆன்லைன் ரம்மியில் பணம் இழப்பு; கண்டித்த கணவர் - கோபத்தில் மகளை கொன்று தாயும் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், பூவரசங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (28). இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீகா (24). இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தத... மேலும் பார்க்க

சென்னை: 'தடாவில் தொடங்கிய 'வடை' தகராறு' - மயிலாப்பூரில் நடந்த கொலை முயற்சி; என்ன நடந்தது?

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வரும் நண்பர்களான 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடந்த 04.05.2025 அன்று இரவு வீட்டினருகே பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த ... மேலும் பார்க்க