வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
பெரியகுளம் அருகே வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள செங்குளத்துப்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் திருமால் (எ) சுரேஷ் (42). கூலித் தொழிலாளி. இவா், வியாழக்கிழமை தேவதானப்பட்டிக்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பினாா். தேவதானப்பட்டி புறவழிச் சாலையில் செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.