செய்திகள் :

உயிர் காக்க உதவிய விமான தாமதம்: ஏக்நாத் ஷிண்டேவின் மனிதாபிமான செயல்!

post image

வடக்கு மகாராஷ்டிரத்திலிருந்து, மாநிலத் தலைநகருக்கு விமானத்தைத் தவறவிட்ட சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யவிருந்த பெண்ணுக்கு மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உதவி செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஷிண்டேவின் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்..

துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெள்ளிக்கிழமை ஜல்கானில் உள்ள முக்தைநகரில் முக்தாபாய் பால்கி புறப்பாடு விழாவிற்கு வருகை தந்திருந்தார். மும்பைக்குத் திரும்பும்போது, ஜல்கானில் அவர் செல்லவிருந்த விமானம் சற்று தாமதமானது. அவசரமாகச் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படும் ஒரு பெண்ணுக்கு இந்த விமான தாமதம் உயிர் காக்க உதவியது.

ஷீத்தல் போர்டே என்பவர் திட்டமிடப்பட்ட மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்காக மும்பைக்குச் செல்லும் நம்பிக்கையுடன் விமான நிலையத்தை அடைந்தார். ஆனால் அவர் வந்த நேரத்தில், அவர் பயணிக்கவிருந்த விமானம் ஏற்கெனவே புறப்பட்டுவிட்டது. அவர் முக்கியமான அறுவைச் சிகிச்சை செய்யவேண்டி இருந்ததாக விமான நிர்வாகத்திடம் உதவி கோரினார். உடனடியாக மாநில அமைச்சர் கிரிஷ் மகாஜனைத் தொடர்பு கொண்டார். அவர் துணை முதல்வர் ஷிண்டேவிடம் உதவி கோரினார்.

நிலைமையைக் கேட்டறிந்ததும், எந்தவித தயக்கமும் இன்றி துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அந்தப் பெண்ணையும், அவரது கணவரையும் மும்பைக்குத் தான் செல்லும் தனி விமானத்தில் அழைத்துச் சென்றார்.

பயணத்தின்போது, ​​அவர் நேரில் அந்த பெண்ணுடன் தொடர்புகொண்டு, அவரது சிகிச்சை குறித்து விவரங்களை விசாரித்தார்.

விமானம் மும்பையில் தரையிறங்கியதும், உடனடியாக சிறப்பு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டதை ஷிண்டே உறுதிசெய்தார் மற்றும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டார்.

ஷிண்டே தலைமையிலான ஆளும் சிவசேனாவைச் சேர்ந்த ஜல்கானின் பாதுகாவலர் அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல், துணை முதல்வரின் இந்த செயலைப் பாராட்டினார்.

இதனிடையே, தான் சாதாரண மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் இருப்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் ஏக்நாத் ஷிண்டே.

இந்த சம்பவத்தில் அவரது தலைமை ஒரு உயிரைக் காப்பதற்கு மட்டுமல்லாமல், பொதுச்சேவையின் மதிப்புகளையும், மனிதாபிமான செயலையும் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது மீண்டுமொரு முறை கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.முன்னதாக, அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய முறைகேட்டில்... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் அடுத்தடுத்து ராஜிநாமா!

பெங்களூரு: ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டத்தை வென்ற களிப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு வீதிகளில் புதன்கிழமை(ஜூன் 4) நடத்திய பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர... மேலும் பார்க்க

நிதி ஆணைய உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் நியமனம்

புது தில்லி: 16-ஆவது நிதி ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி. ரபீ ஷங்கர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த பதவியில் நிதி ஆணையம் தமது அறிக்... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹிமாசலப் பிரதேசம் சென்றுள்ள அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையொ... மேலும் பார்க்க

பையில் துப்பாக்கி: உ.பி.யில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி நபர் கைது !

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலம், ராமராஜ் பகுதியில் உள்ள ஜமால்பூர் கால்வாய் கல்வெர்ட் அருகே சந்தேக நபர் ... மேலும் பார்க்க

சபரிமலையில் விமான நிலையம்: திங்கள்கிழமை சர்வே பணிகள் ஆரம்பம்!

திருவனந்தபுரம்: சபரிமலையில் விமான நிலையம் கட்டமைக்கும் பணியில் முதல்கட்டமாக சர்வே பணிகள் திங்கள்கிழமை(ஜூன் 9) தொடங்குகின்றன. இதற்காக ஆய்வுக் குழுவினர் விமான நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்... மேலும் பார்க்க