செய்திகள் :

சென்னை: லவ் டார்ச்சர்; இளம்பெண் வீட்டில் ரகளை - இளைஞரை கைது செய்த போலீஸ்!

post image

சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அந்தப் பெண்ணின் மூத்த மகளை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கோகுல்குமார் என்ற இளைஞர் காதலித்து வந்திருக்கிறார். அதற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் கோகுல்குமார் தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்து வந்திருக்கிறார். இதையடுத்து அந்தப் பெண்ணின் வீட்டார், கோகுல்குமாரின் வீட்டுக்குச் சென்று உங்கள் மகன், எங்கள் மகளிடம் பேச வேண்டாம் எனக் கூறியிருக்கிறார்கள். அதன் பிறகு கோகுல்குமார் அமைதியாக இருந்து வந்திருக்கிறார்.

கோகுல் குமார்

இந்நிலையில், கடந்தசில தினங்களுக்கு முன்பு அதிகாலையில் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற கோகுல்குமார், உங்களின் இரண்டாவது மகளை நான் காதலிக்கிறேன் எனக் கூறியிருக்கிறார். அதனால் அந்தப் பெண்ணுக்கும் கோகுல்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அந்தப் பெண் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு வீட்டிற்குள் சென்றிருக்கிறார். ஆனால் கோகுல்குமார் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் அத்துமீறி உள்ளே நுழைந்திருக்கிறார். பின்னர் அந்தப் பெண்ணை கீழே தள்ளி தாக்கியதோடு, வீட்டிலிருந்த ஜன்னல் கண்ணாடி மற்றும் வாஷ் பேசின் ஆகியவற்றை உடைத்திருக்கிறார். அதிகாலை நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு கண்விழித்தனர். அதனால் கோகுல்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து அந்தப் பெண், ஐ.சி.எப். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் கோகுல்குமார் (22) மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு கோகுல்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சென்னை: 'தடாவில் தொடங்கிய 'வடை' தகராறு' - மயிலாப்பூரில் நடந்த கொலை முயற்சி; என்ன நடந்தது?

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வரும் நண்பர்களான 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடந்த 04.05.2025 அன்று இரவு வீட்டினருகே பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

பீகாருக்கு மாற்றி அனுப்பப்பட்ட திருத்தணி தொழிலாளரின் சடலம்; மருத்துவர் இடமாற்றம்; பின்னணி என்ன?

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா அருகிலுள்ள பி. ஆர். பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). கூலித் தொழிலாளரான இவர், குடும்பத் தகராறில் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.அதனால் ராஜேந்திரனை அவர... மேலும் பார்க்க

அடுத்தடுத்து மோசடி புகார்; வழக்குபதிவு - சிக்கலில் அதிமுக நிர்வாகி, தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார்?

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார். இவரின் மாமியார் சரஸ்வதி மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். அசோக் குமாரும் ஆரம்பத்தில் பாஜகவில் இருந்த நிலையில், பிறகு அதிமுகவி... மேலும் பார்க்க

லக்கி பாஸ்கர் பாணியில் மோசடி; வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருடி பங்குச்சந்தை முதலீடு; பின்னணி என்ன?

ராஜஸ்தான், கோடாவில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் மக்கள் தொடர்பு மேலாளராக இருந்தவர் சாக்‌ஷி குப்தா. இந்த வங்கியில் பணம் டெபாசிட் செய்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு வந்தார... மேலும் பார்க்க

"ஆள்மாறாட்டம் செய்து ரூ.7.50 லட்சம் மோசடி" - வெளிநாட்டில் கணவரை இழந்த பெண் ஆட்சியரிடம் புகார்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது: 53). இவர், ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலுள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனம் வாயிலாக, கனடா சென்றிருந்த நிலையில... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: 'மதுபோதையில் தகராறு; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்!' - 7 பேரை கைது செய்த போலீஸ்

புதுக்கோட்டை போஸ் நகர், எட்டாம் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது: 23) இவருக்கும், காந்திநகர் இரண்டாம் வீதி பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது,... மேலும் பார்க்க