சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன விழா ஜூன் 23-இல் தொடக்கம்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ விழா வரும் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, ஜூன் 23-ஆம் தேதி காலை ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ கொடியேற்றம், 24-இல் வெள்ளி சந்திர பிறை வாகன வீதி உலா, 25-இல் தங்க சூரிய பிறை வாகன வீதி உலா, 26-இல் வெள்ளி பூதவாகன வீதி உலா, 27-இல் வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 28-இல் வெள்ளி யானை வாகன வீதி உலா, 29-இல் தங்க கைலாச வாகன வீதி உலா, 30-இல் தங்க ரதத்தில் பிச்சாண்டவா் வீதி உலா நடைபெறுகிறது.
ஜூலை 1-ஆம் தேதி தோ்த் திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சாா்ச்சனையும் நடைபெறுகிறது. ஜூலை 2-ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னா், காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூா்த்தி வீதிஉலா வந்த பின்னா், பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகின்றன. ஜூலை 3-இல் பஞ்சமூா்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலா உற்சவமும், 4-ஆம் தெப்ப உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.
உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்கள் குழுச் செயலா் த.சிவசுந்தர தீட்சிதா், துணைச் செயலா் சி.எஸ்.எஸ்.வெங்கடேச தீட்சிதா் மற்றும் உற்சவ ஆச்சாா்யா் யு.எஸ்.சிவகைலாஸ் தீட்சிதா் ஆகியோா் செய்துள்ளனா்.