செய்திகள் :

தொகுதி மறுவரையறை: முதல்வர் ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி

post image

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2001-ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை வெகுவாக வளர்ந்துவிட்டது. ஆகவே, கண்டிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஆகவே, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நிலைப்பாடு.

தொகுதி மறுவரையறை எப்போது நடைபெறப் போகிறது. எந்த அடிப்படையில் நடைபெறப் போகிறது என்று எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதற்கு முன்பாகவே தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் மாய தோற்றத்தை உருவாக்கி வளர்த்தெடுக்க முயல்கிறார்.

தொகுதி மறுவரையறை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெளிவாக கூறியுள்ளார். இப்பணிகளானது. விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும், தென்னிந்திய மாநிலங்கள் உள்ளிட்ட, நாட்டில் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படாது என்றும் உறுதியளித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், தமிழகம் வரும் போதெல்லாம் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், மு. க. ஸ்டாலின், தவறான தகவல்களை தெரிவித்து மக்களை திசை திருப்பும் அரசியலை தொடர்ந்து செய்து வருகிறார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தையும் இந்த விவகாரத்தில் முதல்வர் துணைக்கு அழைத்திருக்கிறார். ஆனால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொகுதி மறுவரையறை பற்றி பேசவில்லை.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென் மாநில முதல்வர்களின் கூட்டம் என்று அறிவித்து, பிசுபிசுத்த கூட்டம் நடத்திய திமுக, இதற்காக தில்லியில் 'இன்டி' கூட்டணி கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?

தில்லியில் 'இன்டி' கூட்டணி கூட்டத்தை கூட்டி, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை ராகுல் காந்தியை வைத்து அறிவிக்க வேண்டியது தானே.

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினால் இதை செய்ய முடியாது. ஏனெனில் 'இன்டி' கூட்டணி தலைவர்களே திமுகவின் கட்டுக்கதையை நம்புவதற்கு தயாரில்லை என்பது தான் நிதர்சனம்.

2027-ம் ஆண்டு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவதால் தொகுதி மறுவரையறையில் தமிழகத்துக்கு எப்படி பிரதிநிதித்துவம் குறையும்?

தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படாது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்தபோதே தெளிவுபடுத்திய பிறகும் தொடர்ந்து பொய்யுரைப்பது ஏன்?

அறிவிக்காத ஒன்றை வைத்து விஷமப் பிரசாரத்தை திமுக செய்வது ஏன்?

திமுகவுக்கு எதிராக கட்சிகள் இணைய வேண்டும்; ஓபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம்: டிடிவி தினகரன்

தொகுதி மறுவரையறை விஷயத்தில் திமுகவை. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், மமதா பானர்ஜி, அரவிந்த் கேஜரிவால் உட்பட 'இன்டி' கூட்டணி தலைவர்கள் யாரும் ஆதரிக்கவில்லையே ஏன்?

முதல்வரின் தொகுதி மறுவரையறை பொய் பிரசாரத்தை ராகுல் காந்தி உட்பட 'இன்டி' கூட்டணி தலைவர்கள் கூட நம்பவில்லை. தமிழக மக்கள் எப்படி நம்புவார்கள். தொகுதி மறுவரையறை குறித்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் மடை மாற்றும் அரசியல் தோலுரிக்கப்பட்டு விட்டது.

2027ம் ஆண்டு நடத்தப்படவுள்ள சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வேண்டாம் என்கிறாரா? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேலம்: வாழப்பாடி அருகே கார் விபத்து - 4 பேர் பலி

சேலம்: சென்னையிலிருந்து கர்நாடகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த 7 பேர் அமர்ந்து பயணிக்க கூடிய சொகுசு கார் ஒன்று சாலையோர தடுப்பில் மோதி இன்று(ஜூன் 7) விபத்துக்குள்ளானது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள... மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் அல்ல கிளர்ச்சிப்பாக்கம் - பயணிகள் அலைக்கழிப்பு: தவெக கண்டனம்!

சென்னை: சென்னை புறநகர்ப் பகுதியான கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து நிலையத்தில் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்காமல் மக்களைக் கைக்குழந்தைகளோடு அலைக்கழித்து திமுக அரசு அவதிக்கு... மேலும் பார்க்க

இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்க... மேலும் பார்க்க

சுங்கச்சாவடி கட்டணம்- உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

மதுரை-தூத்துக்குடி இடையே சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தாக்கல் செய்துள்ள இந்த மேல்முறையீட்டு... மேலும் பார்க்க

உள்ளம் உவகையில் நிறைகிறது! - பழங்குடியின மாணவருக்கு முதல்வர் வாழ்த்து

சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவர் பரத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் பச்சமலை தோனூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் பரத், பொது சட்ட... மேலும் பார்க்க

திமுகவுக்கு எதிராக கட்சிகள் இணைய வேண்டும்; ஓபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம்: டிடிவி தினகரன்

தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை அமித்ஷா வந்தாலும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வர முடியாது என முதல்வர் கூறி வருவது பயத்தின் வெளிப்பாடு என டிடிவி தினகரன் கூறியுள்ளார். திமுக ஆட்சி வேண்டாம் என்று நினைப்பவர்கள் தே... மேலும் பார்க்க