செய்திகள் :

திமுகவுக்கு எதிராக கட்சிகள் இணைய வேண்டும்; ஓபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம்: டிடிவி தினகரன்

post image

தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை அமித்ஷா வந்தாலும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வர முடியாது என முதல்வர் கூறி வருவது பயத்தின் வெளிப்பாடு என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

திமுக ஆட்சி வேண்டாம் என்று நினைப்பவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மதுரை புறநகர் மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குல்பட்ட செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டமானது மதுரை ஆலந்தூர் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2026-தேர்தல் குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்யப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"234 தொகுதிகளிலும் பணியாற்ற கட்சி நிர்வாகிகளின் கட்டமைப்பை சரி செய்து, வரும் தேர்தலில் மதுரையில் அமமுகவினர் போட்டியிட்டாலும் கூட்டணி கட்சி போட்டியிட்டாலும் தீய சக்தி திமுகவை வீழ்த்த திறம்பட செயல்பட கலந்து ஆலோசனை செய்து வருகிறோம்.

இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என பிரதமர் கூறியது சரியான முடிவு. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால்தான் அனைத்து சமுதாய மக்களுக்கும் தேவையான படிப்பிலும் சரி வேலைவாய்ப்பிலும் உரிய பங்கீடு கிடைக்க ஏதுவாக இருக்கும்.

தொடர்ந்து, மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றுதான் முடிவு எடுத்துள்ளனர். யுகங்கள் அடிப்படையில் செய்தி வருவதாக முதல்வர் கூறுவது, தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடு. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் ஆட்சி திமுக.

மதுரைக்கு வந்த முதல்வரால் என்ன நடந்துச்சு? அவர்கள் வண்டவாளம் தண்டவாளம் ஏறியதுதான் மிச்சம். சாக்கடையை துணியை வைத்து மூடியதுதான். முதல்வரை வரவேற்க பிரியாணி கொடுத்து லாரியில் ஆட்களை ஏற்றி வந்ததை செய்திகளில் பார்த்தேன். திமுக கூட்டணி கட்சிகளை வைத்துக்கொண்டு பாஜக தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செய்கிறது என பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.

2026 தேர்தலில் பாஜக கூட்டணியில் தமிழகத்தில் வெற்றி பெறுவோம். கலைஞர் காலத்திலே 10 ஆண்டு காலம் திமுக ஆட்சிக்கு வர முடியாமல் தத்தளித்து நிலையில் பாஜகவை காரணம் காட்டி ஸ்டாலின் இன்றைக்கு ஆட்சிக்கு வந்துள்ளார். சிறுபான்மை மக்கள் உட்பட அனைவரும் திமுகவின் ஆட்சியை புரிந்து கொண்டார்கள். 2026ல் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும். மேலும் பாஜக கூட்டணியையும், எத்தனை முறை அமித்ஷா வந்தாலும் ஆட்சிக்கு வர முடியாது என முதல்வர் கூறி வருவது பயத்தின் வெளிப்பாடு.

திருச்சியில் முக்கியமான நிர்வாகிகளின் இல்ல திருமண விழா 4 மாதங்களுக்கு முன்பே அழைப்பு விடுத்துவிட்டனர். என்னுடன் 2017 காலத்தில் இருந்து பயணிக்கிறார்கள். எனவே, அமித்ஷா சந்திப்பு குறித்து நான் அனுமதி கேட்கவில்லை என்றார்.

ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறார் என்பதை பாஜக தலைவர் தினமும் கூறிக் கொண்டிருக்கிறார்.

ஓபிஎஸ்ஸுக்கு எல்லா முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை அமித்ஷா சென்னை வந்தது குறிப்பிட்ட நிகழ்வுக்காகத்தான். நாளை மதுரை வரும் அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திக்க இருக்கலாம். ஆனால், மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க நான் அனுமதி கேட்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் பின்னால் சட்டமன்ற உறுப்பினர்களும் உரிமை மீட்பு குழுவும் உள்ளது. தேர்தல் நேரத்தில் அவருக்கான முக்கியத்துவம் தெரிய வரும்.

அரசியலில் எந்த ஒரு முயற்சிக்குமே முற்றுப்புள்ளி கிடையாது. அதிமுக என்பது ஜெயலலிதாவின் கட்சி. அவரது தொண்டர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் ஓரணியில் சேர்ந்தால்தான் தீய சக்தி திமுகவை வீழ்த்த முடியும் என்பது மட்டுமல்லாமல் யாரெல்லாம் திமுக ஆட்சி வேண்டாம், முடிவுக்கு கொண்டு வர நினைக்கிறார்களோ? அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும்.

திமுகவில் கூட்டணி உறுதியாகத்தான் உள்ளது. மக்கள் புறந்தள்ளுகின்றனர். ஆர்கே நகரில் இதே கூட்டணிதானே இருந்தது. 2026இல் திமுக கூட்டணி சாயம் வெளுத்து விடும். உறுதியாக அந்தக் கூட்டணி வெற்றிபெற வாய்ப்பில்லை.

எங்கள் கூட்டணியில் உறுதியாக பல கட்சிகள் வரும். திமுக கூட்டணி வரக்கூடிய தேர்தலில் தோல்வியை சந்திக்க இருக்கிறார்கள்.

அதிமுக கூட்டணிக்கு நாங்கள் செல்லவில்லை. எங்கள் கூட்டணிக்குதான் எடப்பாடி பழனிசாமி வந்திருக்கிறார். பொது எதிரி திமுகவை வீழ்த்த பங்காளி சண்டையை தள்ளி வைத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க | அன்புமணியைச் சந்திக்கும் திட்டமில்லை: சென்னையில் ராமதாஸ் பேட்டி

சேலம்: வாழப்பாடி அருகே கார் விபத்து - 4 பேர் பலி

சேலம்: சென்னையிலிருந்து கர்நாடகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த 7 பேர் அமர்ந்து பயணிக்க கூடிய சொகுசு கார் ஒன்று சாலையோர தடுப்பில் மோதி இன்று(ஜூன் 7) விபத்துக்குள்ளானது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள... மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் அல்ல கிளர்ச்சிப்பாக்கம் - பயணிகள் அலைக்கழிப்பு: தவெக கண்டனம்!

சென்னை: சென்னை புறநகர்ப் பகுதியான கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து நிலையத்தில் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்காமல் மக்களைக் கைக்குழந்தைகளோடு அலைக்கழித்து திமுக அரசு அவதிக்கு... மேலும் பார்க்க

இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்க... மேலும் பார்க்க

சுங்கச்சாவடி கட்டணம்- உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

மதுரை-தூத்துக்குடி இடையே சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தாக்கல் செய்துள்ள இந்த மேல்முறையீட்டு... மேலும் பார்க்க

உள்ளம் உவகையில் நிறைகிறது! - பழங்குடியின மாணவருக்கு முதல்வர் வாழ்த்து

சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவர் பரத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் பச்சமலை தோனூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் பரத், பொது சட்ட... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: முதல்வர் ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2001-ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பு தள்ளிவைக்கப்பட்... மேலும் பார்க்க