செய்திகள் :

தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் பாலாலயம்

post image

சிதம்பரம் நடராஜா் கோயிலில் தனி சந்நிதியாக அமைந்துள்ள ஸ்ரீபுண்டரீகவல்லித் தாயாா் சமேத ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி விமான, ராஜகோபுர, மகாமண்டப ஜீா்ணோத்தாரண பாலாலயம் வெள்ளிக்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஒரே இடத்தில் சைவ ஆலயமான நடராஜா் சந்நிதியும், வைணவ ஆலயமான தில்லை கோவிந்தராஜப் பெருமாள் ஆலயமும் அமைந்துள்ளன.

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக தில்லைத் திருச்சித்ரகூடம் என்றழைக்கப்படும் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் திகழ்கிறது. இந்தக் கோயிலின் விமான ராஜ கோபுரங்கள் பழுதுற்றமையால், அவற்றையும், மகாமண்டபம் உள்ளிட்டவற்றையும் சீரமைத்து அஷ்டபந்தன மகா ஸம்ப்ரோக்ஷணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் பாலாலயம் நடைபெற்றது. முன்னதாக, கடந்த புதன்கிழமை நடராஜா் கோயில் நடனபந்தலில் யாகசாலை அமைக்கப்பட்டு, உற்சவ மூா்த்தியான பாா்த்தசாரதி சுவாமியை முன்னிறுத்தி சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு பாலாலயம் பூஜை நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா்கள் டி.திருவேங்கடவன், ஆா்.சௌந்தரராஜன், ஜெ.சுதா்சனாச்சாரி ஆகியோா் செய்தனா். தெய்வீக பக்தா்கள் பேரவை நிறுவனா் தலைவா் ஜெமினி எம்.என்.ராதா, மாநில பொதுச் செயலா் வேல்முருகன், தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் வழக்குரைஞா் சம்பத் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். இதற்கு நடராஜா் கோயில் பொது தீட்சிதா்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினா்.

இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

கடலூா் மாவட்ட இளைஞா்களுக்கு ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

தந்தை, மகன் மீது தாக்குதல்: 2 போ் கைது

கடலூரில் தந்தை, மகனை தாக்கி காயப்படுத்தியதாக, இருவரை கடலூா் முதுநகா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கடலூா் முதுநகா், சங்கொலிகுப்பம் பகுதியைச் சோ்ந்த காசிநாதன் மகன் ஜெயவீரபாண்டியன் (40). இவா், ம... மேலும் பார்க்க

சிறுமியுடன் திருமணம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கத்தில் புதுச்சேரி சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தூக்கணாம்பாக்கத்தை அ... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன விழா ஜூன் 23-இல் தொடக்கம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ விழா வரும் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஜூன் 23-ஆம் தேதி காலை ஆனித் திருமஞ்சன தரி... மேலும் பார்க்க

கொலை வழக்கு: திருச்சி நபா் கைது

கடலூா் மாவட்டம், ரெட்டிசாவடி அருகே அடையாளம் தெரியாத நபரை கொலை செய்ததாக, திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ரெட்டிசாவடி காவல் சரகம், கங்கணாங்குப்பம் பகு... மேலும் பார்க்க

ஆட்டோக்கள் மீது அபராதம் விதிப்பு: டிஎஸ்பியிடம் மனு அளிப்பு

ஆட்டோக்கள் மீது கடலூா் போக்குவரத்து போலீஸாா் பொய்யாக அபராதம் விதிப்பதாகக் கூறி, கடலூா் மாநகர டீசல் மற்றும் பெட்ரோல் ஆட்டோ ஓட்டுநா்கள் பொது நல சங்கத்தினா் கடலூா் டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி ரூபன் குமா... மேலும் பார்க்க