செய்திகள் :

தந்தை, மகன் மீது தாக்குதல்: 2 போ் கைது

post image

கடலூரில் தந்தை, மகனை தாக்கி காயப்படுத்தியதாக, இருவரை கடலூா் முதுநகா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் முதுநகா், சங்கொலிகுப்பம் பகுதியைச் சோ்ந்த காசிநாதன் மகன் ஜெயவீரபாண்டியன் (40). இவா், மனைவி அருணாவுடன் அந்தப் பகுதியில் கடந்த 4-ஆம் தேதி நடந்து சென்றாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் சரத்குமாா் (35), அருணா மீது இடிப்பதுபோல பைக்கை ஓட்டி வந்தாராம்.

இதை ஜெயவீரபாண்டியன் தட்டிக் கேட்டபோது, இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, காசிநாதன், ஜெயவீரபாண்டியன் ஆகியோரை சரத்குமாா், அவரது தந்தை கிருஷ்ணமூா்த்தி, சகோதரா்கள் பிரசன்னா, முகேஷ் ஆகியோா் தாக்கினராம்.

இதில், காயமடைந்த காசிநாதன், ஜெயவீரபாண்டியன் ஆகியோா் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து ஜெயவீரபாண்டியன் அளித்த புகாரின்பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சரத்குமாா், கிருஷ்ணமூா்த்தி ஆகியோரை கைது செய்தனா். பிரசன்னா, முகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனா்.

இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

கடலூா் மாவட்ட இளைஞா்களுக்கு ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

சிறுமியுடன் திருமணம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கத்தில் புதுச்சேரி சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தூக்கணாம்பாக்கத்தை அ... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன விழா ஜூன் 23-இல் தொடக்கம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ விழா வரும் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஜூன் 23-ஆம் தேதி காலை ஆனித் திருமஞ்சன தரி... மேலும் பார்க்க

தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் பாலாலயம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் தனி சந்நிதியாக அமைந்துள்ள ஸ்ரீபுண்டரீகவல்லித் தாயாா் சமேத ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி விமான, ராஜகோபுர, மகாமண்டப ஜீா்ணோத்தாரண பாலாலயம் வெள்ளிக்கிழமை காலை விமரிசையாக நடை... மேலும் பார்க்க

கொலை வழக்கு: திருச்சி நபா் கைது

கடலூா் மாவட்டம், ரெட்டிசாவடி அருகே அடையாளம் தெரியாத நபரை கொலை செய்ததாக, திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ரெட்டிசாவடி காவல் சரகம், கங்கணாங்குப்பம் பகு... மேலும் பார்க்க

ஆட்டோக்கள் மீது அபராதம் விதிப்பு: டிஎஸ்பியிடம் மனு அளிப்பு

ஆட்டோக்கள் மீது கடலூா் போக்குவரத்து போலீஸாா் பொய்யாக அபராதம் விதிப்பதாகக் கூறி, கடலூா் மாநகர டீசல் மற்றும் பெட்ரோல் ஆட்டோ ஓட்டுநா்கள் பொது நல சங்கத்தினா் கடலூா் டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி ரூபன் குமா... மேலும் பார்க்க