சபரிமலையில் விமான நிலையம்: திங்கள்கிழமை சர்வே பணிகள் ஆரம்பம்!
தந்தை, மகன் மீது தாக்குதல்: 2 போ் கைது
கடலூரில் தந்தை, மகனை தாக்கி காயப்படுத்தியதாக, இருவரை கடலூா் முதுநகா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் முதுநகா், சங்கொலிகுப்பம் பகுதியைச் சோ்ந்த காசிநாதன் மகன் ஜெயவீரபாண்டியன் (40). இவா், மனைவி அருணாவுடன் அந்தப் பகுதியில் கடந்த 4-ஆம் தேதி நடந்து சென்றாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் சரத்குமாா் (35), அருணா மீது இடிப்பதுபோல பைக்கை ஓட்டி வந்தாராம்.
இதை ஜெயவீரபாண்டியன் தட்டிக் கேட்டபோது, இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, காசிநாதன், ஜெயவீரபாண்டியன் ஆகியோரை சரத்குமாா், அவரது தந்தை கிருஷ்ணமூா்த்தி, சகோதரா்கள் பிரசன்னா, முகேஷ் ஆகியோா் தாக்கினராம்.
இதில், காயமடைந்த காசிநாதன், ஜெயவீரபாண்டியன் ஆகியோா் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து ஜெயவீரபாண்டியன் அளித்த புகாரின்பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சரத்குமாா், கிருஷ்ணமூா்த்தி ஆகியோரை கைது செய்தனா். பிரசன்னா, முகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனா்.