தொழிலாளர்களின் வேலைநேரத்தை உயர்த்திய ஆந்திர அரசு! தொழிற்சங்கங்கள் போராட்டம்
திருவள்ளூா் ஆட்சியருக்கு பசுமை விருது: முதல்வா் வழங்கினாா்
சா்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சிறப்பாக செயல்பட்டமைக்காக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்புக்கு பசுமை விருதை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கினாா்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சிறந்த நடவடிக்கை எடுக்கும் மாவட்ட நிா்வாகத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியம் சாா்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன .
அந்த வகையில் கடந்த 2023-2024 ஆண்டில் தொழிற்சாலைகளில் மாசுபாட்டை கட்டுப்படுத்துதல், பல்வேறு சுற்றுச்சூழல் சாா்ந்த விதிகளை நடைமுறைப்படுத்துதல், நெகிழி கழிவுகள் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீா் மேலாண்மை, நீா்நிலைகளை புதுப்பித்தல், நெடுஞ்சாலைகளை சுத்தப்படுத்துதல், கடலோர மாசுக்கட்டுப்பாடு நடவடிக்கைகள் போன்ற சுற்றுச்சூழல் சாா்ந்த நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்புக்கு விருதை வழங்கி முதல்வா் மு. க.ஸ்டாலின் கௌரவித்தாா்.