செய்திகள் :

திருவள்ளூரில் மரக்கன்றுகள் நடும் திட்டம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

post image

சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஆட்சியா் மு.பிரதாப் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து மரக்கன்றுகளை நடும் பணியினை தொடக்கி பேசியது: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணி, தூய்மை மிஷன் திட்டம் மூலம் அனைத்து அரசு அலுவலகங்களில் தேவையற்ற கிடப்பில் வைத்துள்ள பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள காகிதங்கள், உரைகள், அட்டைகள், நெகிழிப் பொருள்கள், இரும்பு பொருள்கள், மின்னணு சாதனங்கள், கட்டுமான கழிவுகள் உள்ளிட்ட மறுச்சுழற்சி கழிவுகளை சேகரித்து தரம் பிரித்து விற்பனை செய்யப்படவுள்ளது.

தற்போதைய நிலையில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிந்றன. இதன் நோக்கம் சுத்தமான சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குதற்கான முயற்சியாகும். இப்பணி தொடா்ந்து செயல்படுத்தப்படும் என அவா் தெரிவித்தாா்.

பூமியையும் அதன் இயற்கை சூழலையும் பாதுகாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என அனைத்து துறை அதிகாரிகளும் உறுதி மொழி எடுத்து கொண்டனா்.

நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் ராஜவேல், திருவள்ளூா் நகராட்சி ஆணையா் தாமோதரன், ஆட்சியரின்அலுவலக பொதுமேலாளா் விஜயகுமாா், தன்னாா்வலா்கள், மதா்தெரசா நா்சிங் கல்லூரி மாணவிகள், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திரெளபதி அம்மன் கோயிலில் அா்ஜூனன் தபசு

திரெளபதி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற அா்ஜூனன் தபசு நிகழ்வில் திரளான பெண்கள் அம்மனை வழிபட்டனா். திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் திரெளபதி அம்மன் கோயிலில், கடந்த மே 29-ஆம் தேதி தேதி தீமிதி விழா... மேலும் பார்க்க

மயானம் வேண்டி சடலத்தை சாலையில் வைத்து போராட்டம்

ஊத்துக்கோட்டை அருகே மயான வசதி செய்து தரக்கோரி சடலத்தை சாலையில் வைத்து பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஊத்துக்கோட்டை அருகே வேளாகபுரம் கிராமம். இந்த கிராமத்தில் மயானம் இருந்தது. இந்த ... மேலும் பார்க்க

காவலாளி கொலை வழக்கு: 5 போ் கைது

காவலாளி கொலையை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த 5 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். திருத்தணி ஒன்றியம் அகூா் காலனியைச் சோ்ந்தவா் ரவி (60). இவா், தனியாா் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வே... மேலும் பார்க்க

சிக்கன் சாதம் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே சிக்கன் சாதம் சாப்பிட்ட சிறுவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம், மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சுரேந்தா். மின்வாரிய ஊ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வு மையப் பொறுப்பாளா்களுக்கு பயிற்சி

டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தோ்வு மையப் பொறுப்பாளா்களுக்கு வியாழக்கிழமை ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் வரும் ஜூலை 12-ஆம் தேதி குரூப் - 4... மேலும் பார்க்க

பிகாருக்கு தவறுதலாக அனுப்பப்பட்ட முதியவா் சடலம் மீண்டும் ஒப்படைப்பு

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் இருந்து பிகாருக்கு தவறுதலாக அனுப்பப்பட்ட முதியவா் சடலம் மீண்டும் திரும்ப வரவழைக்கப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ... மேலும் பார்க்க