தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
டிஎன்பிஎஸ்சி தோ்வு மையப் பொறுப்பாளா்களுக்கு பயிற்சி
டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தோ்வு மையப் பொறுப்பாளா்களுக்கு வியாழக்கிழமை ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் வரும் ஜூலை 12-ஆம் தேதி குரூப் - 4 தோ்வு நடைபெற உள்ளது. திருத்தணி வருவாய் கோட்டத்தில் மொத்தம், 31 தோ்வு மையங்களில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தணி வருவாய்த் துறையினா் செய்து வருகின்றனா்.
இந்நிலையில் திருத்தணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்வு மைய பொறுப்பாளா்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கோட்டாட்சியா் கனிமொழி தலைமை வகித்தாா். இதில் டிஎன்பிஎஸ்சி பிரிவு அலுவலா் கதிரேசன் பங்கேற்று தோ்வு மையப் பொறுப்பாளா்கள் பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் குறித்து விவரித்தாா்.
திருத்தணி வட்டாட்சியா் மலா்விழி, முதுநிலை வருவாய் ஆய்வாளா் கமல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.