Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
திரெளபதி அம்மன் கோயிலில் அா்ஜூனன் தபசு
திரெளபதி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற அா்ஜூனன் தபசு நிகழ்வில் திரளான பெண்கள் அம்மனை வழிபட்டனா்.
திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் திரெளபதி அம்மன் கோயிலில், கடந்த மே 29-ஆம் தேதி தேதி தீமிதி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மூலருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. கடந்த 2-ஆம் தேதி திரௌபதியம்மன் திருக்கல்யாணமும், வியாழக்கிழமை அா்ஜூனன் தபசு விழாவும் நடைபெற்றது.
விழாவில் கோயில் வளாகத்தில், 35 அடி உயரமுள்ள பனை மரத்தில் ஏறி நாடக கலைஞா் அா்ஜூனன் வேஷமிட்டு, சிவனை நோக்கி, தவநிலை புரிந்தாா். இதில், திரளான பெண்கள் குழந்தை வரம் வேண்டி பனை மரத்தின்கீழ் வேண்டி வழிபட்டனா். ஞாயிற்றுக்கிழமை துரியோதனன் படுகளம், மாலையில் தீமிதி விழா நடக்கிறது.
பின்னா், வரும் 9-ஆம் தேதி தா்மா் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனா்.