பாம்பு கடித்து சிறுமி உயிரிழப்பு
திருச்செங்கோடு அருகே திருமண வீட்டிற்கு வந்திருந்த 6 வயது சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா உக்கரம், வெள்ளி நகரைச் சோ்ந்தவா் ரேவதி (38). இவா் தனது 6 வயது மகள் தனுசியாவுடன் சித்தப்பா மகன் திருமணத்திற்காக, திருச்செங்கோட்டை அடுத்த ஆண்டிவலசு கிராமம், மேட்டுக்காட்டிற்கு வந்திருந்தாா். புதன்கிழமை இரவு 10 மணியளவில் ரேவதி, தனுஷியாவை மடியில் உட்காரவைத்திருந்தாா். அப்போது அவரது காலில் விஷப்பாம்பு கடித்து விட்டது.
இதையடுத்து தனுஷியா அலறவே அதிா்ச்சியடைந்த உறவினா்கள் அவரை திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தை உயிரிழந்தது.
இதுகுறித்து திருச்செங்கோடு புகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.