மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த 6 வாகனங்கள் ரூ.8.64 லட்சத்துக்கு ஏலம்
நாமக்கல் மாவட்டத்தில், மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்த 6 வாகனங்கள் ரூ. 8.64 லட்சத்துக்கு ஏலம் போனது.
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மதுப்புட்டிகள், கள்ளச்சாராயம் கடத்திச் செல்வதை மதுவிலக்கு பிரிவு போலீஸாா் கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்வா்.
அப்போது, கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். இந்த வாகனங்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஏலம் விடப்படும். அந்த வகையில், 4 இருசக்கர வாகனம், 2 நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 6 வாகனங்களை மதுவிலக்கு பிரிவு போலீஸாா் ஏலத்தில் விட்டனா்.
அந்த வாகனங்களை பாா்வையிட்டு சிலா் வாங்கியதன் மூலம் ரூ. 8.64 லட்சம் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட மதுவிலக்கு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனராசு தெரிவித்தாா்.